PDA

View Full Version : இவை நிலையானதன்று!!



Sasi Dharan
23-06-2012, 12:46 PM
அழகும்... அறிவும்
ஆற்றலும்... ஆர்வமும்...

துணிவும்.. துடிப்பும்...
கோபமும்... வேகமும்...

மென்மையும்.. தன்மையும்..
இளமையும்... இனிமையும்...

நட்பும்... நகைச்சுவையும்...
நடையும்... நளினமும்...

நாணமும்... கானமும்
அள்ளலும்.. துள்ளலும்..

சக்தியும்.. வலிமையையும்..
காதலும்... காமமும்...

இன்னும் இன்னும்
இளமையின் உலகத்தில்
அனைத்துமே நிதர்சனம்தான்...

அரிதாரம் அன்றி பொலிவு
தரும் அகத்தின் அழகுதான்!!!
இவை இயற்கையின் வரங்களே...

ஆனால்!

இதன் ஆயுட்காலம் ஏனோ மிகக்குறைவு!!!

பொய்யான மனிதர்கள் உலகில்
இவை நிலையானதன்று...

மனித ஜீவராசிகளின் உலகில்
இவை வெகு சீக்கிரம் சுயத்தை இழக்கிறது...

இவை வெகு விரைவில் முகத்திரையை
அணிந்து கொள்கிறது!!!

பொய்யான மனிதர்கள் உலகில்
இவை சாத்தியமே...!!!

vasikaran.g
24-06-2012, 11:15 AM
சற்று குழப்பம்
நீங்கள் சொல்ல
வந்த கருத்தில் !
நடை நன்று !
இது என் தாழ்மையான கருத்து ..

கீதம்
04-07-2012, 11:06 PM
அன்றாட வாழ்வில் மூடுபனியென முகம் மூடும் முகத்திரைகள் யாவும் மனசாட்சியென்னும் கதிரவன் முன் காணாமற்போகக்கூடுமே...

ஆரவாரிக்கும் போலிகள் கண்டு அடங்கியொடுங்கும் உண்மை கண்டு ஆதங்கம் வெளிப்படுத்தும் கவிதை. பாராட்டுகள் சசிதரன்.

(சசிதரன் என்றொரு அற்புதக் கவிஞர் முன்பே நம் மன்றத்தில் உண்டு. அவரது கவிதைகள் யாவும் தனிச்சிறப்பு வாய்ந்தவை)