PDA

View Full Version : கடும் தவம் ..



reena
12-06-2012, 03:57 AM
உன் கண்களை நேருக்கு நேராய் சந்தித்து....
பார்வை என்னும் வீணை மீட்டு ...
அதில் பிறக்கும் சங்கீத ஒலியான காதலை .
இமைகளின் அசைவால் பரிமாறி...
உன் கண்ணோடு என்றும் கண்மணியாய் ..
உன் நினைவோடு உன் தேவதையாய் ...
நித்தமும் மனதில் வாழும்...
அற்புத வரம் பெற...
நான் புரியும் கடும் தவம் ...
பலன் தருமோ ???

பென்ஸ்
02-07-2012, 08:19 AM
தவம் எப்போதும் வரத்தை கொடுத்துவிடும்...
அந்த வரத்தை சரியாய் பயன்படுதினால் நலமே...

கீதம்
14-08-2012, 05:27 AM
இசைத்தவம் இசைத்தவள் இசைவுக்கு இசையுமோ இறை?

வரம் தரும் நாளில் வரமாய் அந்த வரனும் வருதலே முறை!

நம்பிக்கையோடுதானே மேற்கொள்ளப்படுகிறது ஒவ்வொரு தவமும்!

கவித்தவம் மெய்ப்பிக்கும் கவித்துவம். பாராட்டுகள் ரீனா.