PDA

View Full Version : மென்மை



ஜான்
08-06-2012, 02:37 AM
இன்னும்

பத்திரமாக வைத்திருக்கிறாள்

ஆறாப்பு படிக்கையில்

பொன்வண்டு பிடித்து

ஒளித்து வைத்திருந்த

துருப்பிடித்த டப்பாவை ....

எதற்கென்று கேட்டால்
எளிதாக சொல்கிறாள்

"பொன்வண்டு டப்பா"

நாகரா
08-06-2012, 05:23 AM
மென்மையின் மேன்மையை வன்மையாய்ச் சொல்லும் கவி, வாழ்த்துக்கள் ஜான்.

அமரன்
09-06-2012, 06:14 PM
அது அப்படித்தான் ஜான்..

துருக்கள் அல்ல
அவை
பொன்வண்டின் நினைவுருக்கள்..

மனசை வருடும் கவிதை.

கீதம்
10-06-2012, 01:56 AM
பொன்வண்டு அடைத்துவைத்த டப்பாவில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன நினைவு வண்டுகள்.

ஆறாப்பு - ஆறாப்புக்கே அழைத்துச் செல்லும் சொல்லாடல்.

அழகான கவிதை. பாராட்டுகள் ஜான்.