ஆதி
04-06-2012, 10:57 AM
//1. நம் இருவருக்கும் இடையே ஆன
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே...
//
இந்த கவிதையில் நம் எனும் வார்த்தை பிளவு மனதையும் குறிக்கிறது, புத்தனையும் குறிக்கிறது
என் உன் என்பது நம் மனம், மூன்றாம் கோப்பை புத்தன்
புத்தன் எப்போதுமே எந்த சலனமும் இல்லாமல் காலியாகவே இருக்கிறான்
நம் இருவருக்கும் இடையில் இருக்கும் தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான் அருந்த அருந்த, இது வெளி மனம், நான் எனும் ஆங்காரம் கொண்ட நிலை
உன் கோப்பை நிரம்பிக் கொண்டே இருக்கிறது, எப்படி ?
வெறுமையால் நிரம்பலாம், திமிரால் நிரம்பலாம், எல்லாம் தெரியும் எனும் கர்வத்தோடு நிர்ம்பலாம், எல்லாம் சூன்யம் எனும் புத்த தத்துவத்தில் உற்ற விழிப்புணர்வால் நிரம்பலாம்
எப்படி நிரம்பினாலும் அந்த மாற்றம் என்னோடு முடிவுக்கு வந்துவிடுகிறது
நீ(புத்தன்) எப்போதும் போலவே நிச்சலனமாய் இருக்கிறாய் என்று சொல்கிறது
//2.குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..
//
இது நேரடியாக பேசுகிறது, ஆனால் இது ஒரு சின்ன நுட்பம் உண்டு
கடவுளை வெளிப்புறமாய் தேடுவது விஞ்ஞானம்
உட்புறமாய் தேடுவது மெஞ்ஞான*ம்
ஒரு காட்சி இங்கு உதார*ண*மாய் சொல்லப்பட்டிருக்கிறது, ஒருவன் புத்த சிலையை எரிக்கிறான்
ஏன் எரிக்க வேண்டும் ?
மிஸல் ஃபூகோ(பின்னவீனத்துவ சித்தாந்தி) கூட பதில் சொல்றான்
குறிக்கும் குறிப்பீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கதவு எனும் சொல்லுக்கும் கதவு எனும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கதவு எனும் சொல் குறிப்பீடு
கதவு எனும் பொருள் குறி(இமேஜ்)
கதவை ஆங்கிலத்தில் door என்றும் சொல்கிறோம், அப்படி சொல்வதால் அதன் இமேஜ் மாறிவிடுவதில்லை
தமிழில் கதவு எனும் போதும் ஆங்கிலத்தில் door எனும் போதும் நமக்கு தோன்று இமேஜ் என்னவோ கதவை பற்றித்தான், door எனும் போது நாம் சுவரை நினைப்பதில்லை
அப்படியானால் இந்த உலகம் இமேஜால் ஆனது, மொழி கூட இமேஜால் ஆனதுதான் இல்லையா
புத்தனின் சிலை என்பது இமேஜ், புத்தனே அல்ல(இங்கே எண்டர் தி டிராகன், எனும் புரூஸ்லீயின் படத்தில், கடைசி கட்டத்தில் வரும் பிரேக் தி இமேஜ் எனும் வசனம் நினைவு கூரவும்)
அது புத்தனின் மாயை புத்தனை போல தோன்றுதல் புத்தனே அல்ல
அதனை அழிக்கும் போதே உண்மையான புத்தன் கிடைக்கிறான்
நாம் கடவுளுக்கு ஒரு குணம் வைத்திருப்போம், கடவுள் என்றால் இப்படி கடவுள் என்றால் அப்படி என்று, அந்த இமேஜோடு கடவுள் இல்லை என்றால் நமக்கு உண்டாகும் ஏமாற்றம் கடவுளை வெறுக்க வைக்கும் அல்லது கடவுளே இல்லை என்று பிரகடனப்படுத்த வைக்கும் இல்லையா
கடவுளை கடவுளாய் ஏற்றுக் கொள்ளுதல்
எப்படி இது சாத்தியம் என்றால் ?
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமல் இருப்பதால் மட்டுமே
அதனால்த்தான் நீ நீயாய் இரு என்று சொல்கிறோம்
பிறரை அப்படியே ஏற்று கொள்ள பழக, முதலில் நாம் நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்
இப்போது புதிர் அவிழ்ந்துவிடுகிறது அக புத்தனை காக்க ஏன் புற புத்தன் எரிக்கப்பட்டானென
தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான்
அருந்த அருந்த உன் கோப்பை
நிரம்பிக்கொண்டே இருந்தது
மூன்றாம் கோப்பை
எப்போதும் போல்
காலியாகவே...
//
இந்த கவிதையில் நம் எனும் வார்த்தை பிளவு மனதையும் குறிக்கிறது, புத்தனையும் குறிக்கிறது
என் உன் என்பது நம் மனம், மூன்றாம் கோப்பை புத்தன்
புத்தன் எப்போதுமே எந்த சலனமும் இல்லாமல் காலியாகவே இருக்கிறான்
நம் இருவருக்கும் இடையில் இருக்கும் தேநீர் கோப்பைகளில்
என் கோப்பையை நான் அருந்த அருந்த, இது வெளி மனம், நான் எனும் ஆங்காரம் கொண்ட நிலை
உன் கோப்பை நிரம்பிக் கொண்டே இருக்கிறது, எப்படி ?
வெறுமையால் நிரம்பலாம், திமிரால் நிரம்பலாம், எல்லாம் தெரியும் எனும் கர்வத்தோடு நிர்ம்பலாம், எல்லாம் சூன்யம் எனும் புத்த தத்துவத்தில் உற்ற விழிப்புணர்வால் நிரம்பலாம்
எப்படி நிரம்பினாலும் அந்த மாற்றம் என்னோடு முடிவுக்கு வந்துவிடுகிறது
நீ(புத்தன்) எப்போதும் போலவே நிச்சலனமாய் இருக்கிறாய் என்று சொல்கிறது
//2.குளிர் நடுக்கிய இரவொன்றில்
புத்தன் சிலை எரித்து
நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தவனிடம்
அதிர்ச்சியுடன் கேட்டேன்
என்ன செய்து கொண்டிருக்கிறாய் என
அவன் நிதானமாகச் சொன்னான்
புற புத்தனை எரித்துக் கொண்டிருக்கிறேன்
என் அக புத்தனை காத்துக் கொள்ள..
//
இது நேரடியாக பேசுகிறது, ஆனால் இது ஒரு சின்ன நுட்பம் உண்டு
கடவுளை வெளிப்புறமாய் தேடுவது விஞ்ஞானம்
உட்புறமாய் தேடுவது மெஞ்ஞான*ம்
ஒரு காட்சி இங்கு உதார*ண*மாய் சொல்லப்பட்டிருக்கிறது, ஒருவன் புத்த சிலையை எரிக்கிறான்
ஏன் எரிக்க வேண்டும் ?
மிஸல் ஃபூகோ(பின்னவீனத்துவ சித்தாந்தி) கூட பதில் சொல்றான்
குறிக்கும் குறிப்பீடுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கதவு எனும் சொல்லுக்கும் கதவு எனும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
கதவு எனும் சொல் குறிப்பீடு
கதவு எனும் பொருள் குறி(இமேஜ்)
கதவை ஆங்கிலத்தில் door என்றும் சொல்கிறோம், அப்படி சொல்வதால் அதன் இமேஜ் மாறிவிடுவதில்லை
தமிழில் கதவு எனும் போதும் ஆங்கிலத்தில் door எனும் போதும் நமக்கு தோன்று இமேஜ் என்னவோ கதவை பற்றித்தான், door எனும் போது நாம் சுவரை நினைப்பதில்லை
அப்படியானால் இந்த உலகம் இமேஜால் ஆனது, மொழி கூட இமேஜால் ஆனதுதான் இல்லையா
புத்தனின் சிலை என்பது இமேஜ், புத்தனே அல்ல(இங்கே எண்டர் தி டிராகன், எனும் புரூஸ்லீயின் படத்தில், கடைசி கட்டத்தில் வரும் பிரேக் தி இமேஜ் எனும் வசனம் நினைவு கூரவும்)
அது புத்தனின் மாயை புத்தனை போல தோன்றுதல் புத்தனே அல்ல
அதனை அழிக்கும் போதே உண்மையான புத்தன் கிடைக்கிறான்
நாம் கடவுளுக்கு ஒரு குணம் வைத்திருப்போம், கடவுள் என்றால் இப்படி கடவுள் என்றால் அப்படி என்று, அந்த இமேஜோடு கடவுள் இல்லை என்றால் நமக்கு உண்டாகும் ஏமாற்றம் கடவுளை வெறுக்க வைக்கும் அல்லது கடவுளே இல்லை என்று பிரகடனப்படுத்த வைக்கும் இல்லையா
கடவுளை கடவுளாய் ஏற்றுக் கொள்ளுதல்
எப்படி இது சாத்தியம் என்றால் ?
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லமல் இருப்பதால் மட்டுமே
அதனால்த்தான் நீ நீயாய் இரு என்று சொல்கிறோம்
பிறரை அப்படியே ஏற்று கொள்ள பழக, முதலில் நாம் நம்மை அப்படியே ஏற்றுக் கொள்ள பழக வேண்டும்
இப்போது புதிர் அவிழ்ந்துவிடுகிறது அக புத்தனை காக்க ஏன் புற புத்தன் எரிக்கப்பட்டானென