சொ.ஞானசம்பந்தன்
03-06-2012, 10:21 AM
எலெக்த்ராவின் தமக்கை இஃபிஜெநியா என்பது நமக்குத் தெரியும் . இவளது கதையை நாடகமாக்கியுள்ளார் யூரிப்பிடீஸ் . இவரது இறுதிப் படைப்பு இது
அகமெம்நோனின் தம்பி மெநெலாஸ் . இவருடைய மனைவி , பேரழகி ஹெலெநாவை ட்ரோய் நகரத்தார் அழைத்துப் போய்விட்டனர் . அவளை மீட்டு வர,
கிரேக்கக் கப்பல்கள் குழுமின.
நெடுநாள் ஆகியும் பயணிக்க இயலாதவாறு கடுமையான எதிர்க் காற்று வீசிற்று . அது ஓய்வதாய்த் தெரியவில்லை . தெய்வம்தான் உதவவேண்டும் ஆகையால் அதனிடம் அருள்வாக்கு வேண்டியபோது
கல்க்காஸ் என்பவர் மூலமாய் தெய்வம் பேசியது :
இஃபிஜெநியாவைப் பலி கொடுத்தால் காற்று சாதகமாகத் திரும்பும் " .
படை நடத்திப் பகைவரை வென்று ஹெலெநாவை மீட்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அகமெம்நோன் அதற்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும் ; மகளை இழக்க விரும்பாத க்ளித்தெம்நேஸ்த்ரா
எதிர்த்தாள் . இஃபிஜெநியாவை மணக்க விரும்பியிருந்த எக்கிலீஸ் ( Achilles ) அவளைக் காப்பாற்ற முனைந்தான் ; ஆனால் தெய்வக் கட்டளைக்கு அடிபணிய வேண்டுமென மிகப் பெரும்பாலோரின் உறுதிகண்டு
பின்வாங்கினான்.
வேறு வழியின்றி மங்கை பலியானாள் இது முக்கிய காரணம் அகமெம்நோனைக் க்ளித்தெம்நேஸ்த்ரா கொன்றமைக்கு .
இந்த நாடகமும் செய்யுளால் இயன்றதே . இதன் ஆங்கில மூலத்திலிருந்து சில காட்சிகளை வாசிப்போம் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
அகமெம்நோனின் தம்பி மெநெலாஸ் . இவருடைய மனைவி , பேரழகி ஹெலெநாவை ட்ரோய் நகரத்தார் அழைத்துப் போய்விட்டனர் . அவளை மீட்டு வர,
கிரேக்கக் கப்பல்கள் குழுமின.
நெடுநாள் ஆகியும் பயணிக்க இயலாதவாறு கடுமையான எதிர்க் காற்று வீசிற்று . அது ஓய்வதாய்த் தெரியவில்லை . தெய்வம்தான் உதவவேண்டும் ஆகையால் அதனிடம் அருள்வாக்கு வேண்டியபோது
கல்க்காஸ் என்பவர் மூலமாய் தெய்வம் பேசியது :
இஃபிஜெநியாவைப் பலி கொடுத்தால் காற்று சாதகமாகத் திரும்பும் " .
படை நடத்திப் பகைவரை வென்று ஹெலெநாவை மீட்கும் பொறுப்பை மேற்கொண்டிருந்த அகமெம்நோன் அதற்கு உடன்பட்டுத்தான் ஆக வேண்டும் ; மகளை இழக்க விரும்பாத க்ளித்தெம்நேஸ்த்ரா
எதிர்த்தாள் . இஃபிஜெநியாவை மணக்க விரும்பியிருந்த எக்கிலீஸ் ( Achilles ) அவளைக் காப்பாற்ற முனைந்தான் ; ஆனால் தெய்வக் கட்டளைக்கு அடிபணிய வேண்டுமென மிகப் பெரும்பாலோரின் உறுதிகண்டு
பின்வாங்கினான்.
வேறு வழியின்றி மங்கை பலியானாள் இது முக்கிய காரணம் அகமெம்நோனைக் க்ளித்தெம்நேஸ்த்ரா கொன்றமைக்கு .
இந்த நாடகமும் செய்யுளால் இயன்றதே . இதன் ஆங்கில மூலத்திலிருந்து சில காட்சிகளை வாசிப்போம் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.