PDA

View Full Version : உனக்காக அன்று ...



chezhian
07-04-2003, 07:58 PM
உனக்காக அன்று ...


பூவிதழ் தைத்து
வேலி குருதி சிந்த

மிதிப்பவர் இல்லாமல்
மரநிழல் மௌனமாய் அழ

சின்னப் பொருள் சேர்த்தவன்
இதயத்தைக் கோட்டைவிட

விளையாட்டுப் பேச்சை
வினையாகக் கொண்டுவிட

காதல் சோறுவைக்கப்போனவன்
கால் கெண்டைச்சதை குதறுபட்டு

ஜன்னி நோய் வந்ததாலே
ஜனிக்கும் வரிகள்

மனைவிக்குப் பொய்தந்து
மறைத்த வடுக்கள்

இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்
உனக்காக அன்று
ஆரம்பித்த கவிதைகளை....

இளசு
08-04-2003, 06:18 AM
காதல் நோய் முற்றி ஜன்னி வந்த பின்னால்தான்
தமிழ்க்கன்னி உங்களை இன்னும் நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் போலும்!

பாராட்டுகள் செழியன்...