PDA

View Full Version : என்ன பதில் சொல்ல?



இராஜிசங்கர்
30-05-2012, 11:09 AM
அடக் கடவுளே! இதென்ன இம்சை!
உன்னைப் பார்க்காமல் பூக்கவே போவதில்லையென்று
அனைத்துச்செடிகளும் உண்ணாவிரதம் இருக்கின்றன!
எனக்காக வேண்டாம்
இவைகளுக்காகவாவது நாளை சந்திக்க வா.
பாவம்.என்ன சமாதானம் சொல்லமுடியும் இவைகளுக்கு நாம்?

கீதம்
02-06-2012, 10:07 AM
வாடிக்கிடக்கும்போதிலும் வதனத்தில் புன்னகையுடன் பேசிக்கொள்கின்றனவாம் பூக்களெல்லாம், 'இதைத்தான் அடுத்த இலைக்குப் பாயசம் கேட்பதென்பது' என்று.

அழகான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

இராஜிசங்கர்
03-06-2012, 06:45 AM
வாடிக்கிடக்கும்போதிலும் வதனத்தில் புன்னகையுடன் பேசிக்கொள்கின்றனவாம் பூக்களெல்லாம், 'இதைத்தான் அடுத்த இலைக்குப் பாயசம் கேட்பதென்பது' என்று.

அழகான கவிதைக்குப் பாராட்டுகள் இராஜி.

நன்றி கீதம் அக்கா

aasaiajiith
06-06-2012, 01:24 PM
செடிகளின் மௌனவிரதம்
சாத்தியம் இல்லை எனும்போதும்
அழகு காத்திருப்பின் காரணமாய்
சேர்த்து கொள்வோமே சாத்தியமாய் ....

வாழ்த்துக்கள் !