ஜான்
24-05-2012, 12:56 PM
யாவற்றையும் உதிர்த்துவிட்டு
மென்மையாகி விட்டேன் பார்
என்றது மரம் ....
வெறுமையாகிவிட்டாயே என்றேன்....
ஆமாம் ஞானியாகிவிட்டேன் என்றது!
எனக்கும்
அப்படித்தான் தெரிந்தது .....
என்றாலும் அழகில்லையே
இலைஇல்லை ,பறவை இல்லை கிளை இல்லை
நிழல்கூட இல்லை என்றேன்...
என்றேன்...
நீயும் உதிர்த்துப் பாரேன் என்றது
அட! இதோ!இந்த சட்டைகூட
சுமையாய்த்தான் தெரிகிறது!!
ஆனால்
அழகில்லாமல் போய்விட்டேனோ?!!
மென்மையாகி விட்டேன் பார்
என்றது மரம் ....
வெறுமையாகிவிட்டாயே என்றேன்....
ஆமாம் ஞானியாகிவிட்டேன் என்றது!
எனக்கும்
அப்படித்தான் தெரிந்தது .....
என்றாலும் அழகில்லையே
இலைஇல்லை ,பறவை இல்லை கிளை இல்லை
நிழல்கூட இல்லை என்றேன்...
என்றேன்...
நீயும் உதிர்த்துப் பாரேன் என்றது
அட! இதோ!இந்த சட்டைகூட
சுமையாய்த்தான் தெரிகிறது!!
ஆனால்
அழகில்லாமல் போய்விட்டேனோ?!!