சொ.ஞானசம்பந்தன்
22-05-2012, 10:41 AM
ஹெமொன் -- அப்பா , கடவுள் அளிக்கிறார் மனிதர்க்குத்
தப்பா சரியா என்பதை யறியும்
திறனில் மிகச்சிறு பகுதியை . ஒருவர்
பெறுமவற்றுள் அதனினும் முக்கியம் வேறில்லை .
ஆனால்நீ சொன்னது தவறாக இருக்காதோ ?
சொல்ல அறியேன்நான் , சொல்லுந் தகுதியை
உடையவனாய் இருக்கவும் விரும்பவில்லை.
என்றாலும் இன்னொருவர் கருத்தும் சரியாக
இருக்கலாம் ; உன்னைப் பற்றிப் பற்பலர்
சொல்வதை , செய்வதை , விமர்சிப் பதையும்
அறியும் நிலையில் இருக்கின் றேன்நான் :
எளிய மனிதன் உன்பார்வைக் கஞ்சுகிறான்
நீகேட்க விரும்பாத செய்திகளைச் சொல்லத்
தேவைப் படும்போது.
நானோ மறைவில் கேட்கின்றேன் அவள்பற்றி
ஊரார் பேசுகின்ற பரிதாபப் பேச்சினை :
பெரும்புகழ் தரற்குரிய செய்கையைச் செய்தவள்
கூர்கொடிய முடிவை விலையாய்ப் பெறுதற்குக்
கொஞ்சமும் உரியவள் அல்லள் என்கிறார் .
போரில் மாய்ந்து வீழ்ந்த சோதரனைக்
கொடிய நாய்பறவை சின்னப் படுத்தலைப்
பார்க்க மறுத்தவள்,
அடக்க மின்றிக் கிடக்க விடாதாள்
" பொற்பதக்கம் பெறுவதற்குத் தக்கவள் அல்லளோ ? "
என்றுதான் கமுக்கமாய்க் கூறுகிறார் , பரப்புகிறார் .
ஆகவே ஒரேயொரு கோணத்தில் பார்வையைப்
பதிக்காதே . நீசொல் வதுமட்டும் சரியென்றும்
பிறர்மொழிவ தெல்லாம் பிழையென்றும் நம்பி
( தொடரும் )
-----------------------------------------------------------------------------------------------------------------.
தப்பா சரியா என்பதை யறியும்
திறனில் மிகச்சிறு பகுதியை . ஒருவர்
பெறுமவற்றுள் அதனினும் முக்கியம் வேறில்லை .
ஆனால்நீ சொன்னது தவறாக இருக்காதோ ?
சொல்ல அறியேன்நான் , சொல்லுந் தகுதியை
உடையவனாய் இருக்கவும் விரும்பவில்லை.
என்றாலும் இன்னொருவர் கருத்தும் சரியாக
இருக்கலாம் ; உன்னைப் பற்றிப் பற்பலர்
சொல்வதை , செய்வதை , விமர்சிப் பதையும்
அறியும் நிலையில் இருக்கின் றேன்நான் :
எளிய மனிதன் உன்பார்வைக் கஞ்சுகிறான்
நீகேட்க விரும்பாத செய்திகளைச் சொல்லத்
தேவைப் படும்போது.
நானோ மறைவில் கேட்கின்றேன் அவள்பற்றி
ஊரார் பேசுகின்ற பரிதாபப் பேச்சினை :
பெரும்புகழ் தரற்குரிய செய்கையைச் செய்தவள்
கூர்கொடிய முடிவை விலையாய்ப் பெறுதற்குக்
கொஞ்சமும் உரியவள் அல்லள் என்கிறார் .
போரில் மாய்ந்து வீழ்ந்த சோதரனைக்
கொடிய நாய்பறவை சின்னப் படுத்தலைப்
பார்க்க மறுத்தவள்,
அடக்க மின்றிக் கிடக்க விடாதாள்
" பொற்பதக்கம் பெறுவதற்குத் தக்கவள் அல்லளோ ? "
என்றுதான் கமுக்கமாய்க் கூறுகிறார் , பரப்புகிறார் .
ஆகவே ஒரேயொரு கோணத்தில் பார்வையைப்
பதிக்காதே . நீசொல் வதுமட்டும் சரியென்றும்
பிறர்மொழிவ தெல்லாம் பிழையென்றும் நம்பி
( தொடரும் )
-----------------------------------------------------------------------------------------------------------------.