PDA

View Full Version : உதிரத்துளிகள்



reena
22-05-2012, 07:27 AM
உன் நினைவலைகளால்....
வாடுகிறேன்....
சிறகுகள் உடைந்த..
பறவையாய் ..
இங்கு நான்...

சிறகுகள் இருந்தும் ..
இல்லாதவனாய்..
அங்கு நீ ....
காலத்தின்...
சூழ்ச்சியா இது ??

உன்னை நினைத்து...
உன் அன்பை நினைத்து...
சிலநேரம்..
பயபடுகிறேன்...

இதை ...
எண்ணி எண்ணி ...
மனம் ...
வெம்மி வெம்மி...
விழியோரம்...
சில துளிகள்...

உதிர்ந்தது ..
வெறும் கண்ணீர் ...
துளிகள் அல்ல...
உள்ளத்தின்...
உதிரத்துளிகள் ....!!!

சிவா.ஜி
22-05-2012, 10:01 AM
பிரிவுச் சோகத்தை அழகான வரிகளில் கவிதையாக்கிய ரீனாவுக்கு வாழ்த்துக்கள்.

(நன்றாக கவிதை சொல்ல வருகிறது உங்களுக்கு...இனி இன்னும் சில கனமானக் கருவை கவிதையாக்கலாமே சகோதரி. பெரும்பாலான கவிஞர்களின் ஆரம்பக் கவிதைகள் காதலையும், காதல் சோகத்தையும் சொல்லுவதாய்தான் இருக்கும்...ஆனால் காலப்போக்கில் அதை கடந்து வந்துவிடுவார்கள். நீங்கள் அந்த நிலையைக் கடக்கலாம்....இன்னும் நல்லக் கவிகளைப் படைக்கலாம்....வாழ்த்துக்கள்)