PDA

View Full Version : ஈடு இல்லா அன்பு....



reena
22-05-2012, 07:08 AM
தாய் சுமந்தாள் ...
கருவறையில்...
தந்தை சுமந்தார்...
இதயம்தனில்..
தாயின் அன்பும்..
தந்தையின் அரவணைப்பும்...
ஈடு இல்லா அரும் அணைப்பு ...

தந்தை கை பிடித்து ...
பொறுமையாய் ..அருமையாய்..
நடை பயின்றேன்...
தாயின் தாலாட்டில் இன்பமாய் ...
அன்பை நான் உணர்ந்தேன் ...

புதுமையாய் பல சொந்தங்கள்..
இதயம் வந்து சேர்ந்தாலும்..
என்றும் பசுமையாய்..
மனதில் நீங்காத..
இனிமையான பந்தங்கள் ...
நம்மை ஈன்றவர்கள்...

பாசம் ....அன்பு...
இவற்றை அறிந்தது...
புரிந்தது...அவர்களிடம்..
பிறவிகள் பல உண்டெனில்...
அத்தனை பிறவியிலும்..
இந்த தாய்க்கும்...தந்தைக்கும்...
அருமை மகளாய் பிறந்து..
பெருமை அடைய வேண்டுகிறேன்..!!!

சிவா.ஜி
22-05-2012, 10:03 AM
ஆமாம்...என்றும் இதயத்திலிருந்து நீங்காத பந்தங்கள். பாராட்டுக்கள் ரீனா.

மஞ்சுபாஷிணி
22-05-2012, 11:42 AM
அம்மா அப்பாவின் அன்பு என்றும் நிலைத்து நீடித்திருக்க நானும் வாழ்த்துகிறேன் ரீனா.. அருமையான மனதை நெகிழவைக்கும் கவிதை வரிகள்.

vasikaran.g
26-05-2012, 01:18 PM
ஈடு இல்லா அன்பு
சாரல் மழை ..

jayanth
26-05-2012, 01:20 PM
அருமையான கவிதை...