Log in

View Full Version : உன்னத பந்தம்...



reena
21-05-2012, 02:28 PM
மாசில்லா மாணிக்கமே...
மனம் கவர்ந்த மன்னவனே ...
உன் குரல் கேட்கும் ...
நொடிகள் எல்லாம் ...
நீங்காத பொன் நொடிகளாய்...
மனதிற்குள்ளே வட்டமிட்டு...
ஆயிரம் விண்மீனாய் ...
புது அவதாரம் எடுத்து...
ஜொலிக்கிறது பொலிவுடன்....

நொடிகளே நிம்மிடங்களாய் ...
நிமிடங்களும் மணிநேரம்களாய்..
இப்படி இப்படி....
உன் மனதோடும்...
என் மனதில் உன் நினைவோடும்...
இனிமை நிறைந்த குரலோடும்..
ஆயுள் முடியும் தருணம் வரை...
வாழும் வரம் வேண்டவேண்டும்...

மனதில் கேள்விகள் எழுந்ததுண்டு...
குழப்பங்கள் நடந்ததுண்டு...
இப்படியாய் ஒரு நேசம்....
எப்படி அது சாத்தியம் என ...
கேள்விக்கு பதிலும்...
குழப்பத்திற்கு தீர்வும்...
ஆகிய அனைத்தும்...
ஒன்று தான்...
அது அன்பு தான்...

காதல் என்னும் ..
மூன்று எழுத்து வார்த்தையில்...
அடக்கமுடியாத...
மேன்மையான உறவு அது...

அன்பும் ...நேசமும்...
காதலும்....ஆகிய
அனைத்திற்கும் மேலான ...
உன்னதமான ...உயர்வான ..
தெய்வீக பந்தம் ....
உன் சொந்தம்....