PDA

View Full Version : சர்வேசா..



rambal
07-04-2003, 05:26 PM
சுதேசி சுதேசி என்றே
வளர்த்தோம் சர்வேசா...
இந்தப் பயிரை
கண்ணீர் விட்டே காத்தோம்...
கோக்கும் பெப்ஸியுமாய்
ஊற்றினால் எப்படி?

காந்தியிசம் கம்யூனிசம் அழிந்தால்
என்ன சர்வேசா?
மனிதம் என்ன ஆனது...
அதைக் கூடவா
ஆடு மாடுகளுக்கு
தின்னக் கொடுக்க வேண்டும்?

அஹிம்சையில்
அகரத்தை அடித்து சூப்பு
குடித்து விட்டு
சொன்னவனை
துரோகியாகவா
அறிவிக்க வேண்டும்?

ராட்டையில்
நூல் நூற்ற காலம்
அழிந்து
போனாலும் பரவாயில்லை...
அதற்காக
நூலை மட்டுமா உடுத்த வேண்டும்?

இந்தியமும் இல்லாமல்
மேற்கத்தியமும் இல்லாமல்
திரிந்து
இரண்டும் கெட்டானாகவா
இருக்க வேண்டும்?

இதற்காகவா இந்தப் பயிரை
வளர்த்தோம் சர்வேசா?

இளசு
07-04-2003, 05:54 PM
அமரகவியின் ஆன்மாவுக்கும் வலிக்கும்
இளையகவி சொன்ன இன்றைய நிலை கேட்டால்.

நல்ல படைப்பு, பாராட்டுகிறேன் ராம்!

poo
08-04-2003, 01:09 PM
ஒவ்வொரு இளைஞனுக்கும் இது உதித்தால் நாடு வளம் பெறும்..

பாராட்டுக்கள் ராம்!!!

gankrish
11-04-2003, 12:26 PM
சர்வேசா.. வானும் மண்னும் உன்னால் வளர்ந்தது சர்வேசா.
பூ சொன்னது போல் ஒவ்வொரு மனிதனும் மனது வைத்தால் நடக்காதது ஒன்றும் இல்லை