PDA

View Full Version : என் கண்ணில் ஏன் விழுந்தாய்? பதில்



pradeepkt
25-02-2005, 02:47 AM
கண்ணில இத்தனை விழுதுன்னே நீங்க சொன்னப்புறம்தான் கவி யோசிச்சேன்.
நல்ல கேள்வி!
இதோ பதில் இப்படியும் இருக்கலாம்:

பார்வையாக உன் காட்சிக்கு
பாவையாக உன் மகிழ்ச்சிக்கு
காட்சியாக உன் நெகிழ்ச்சிக்கு
தூசியாக என் நினைவுக்கு
தூண்டலாக உன் வளர்ச்சிக்கு
கனவாக உன்மேல் என் ஆட்சிக்கு
கனமாக என்மேல் உன் ஆட்சிக்கு


அன்புடன்,
பிரதீப்

kavitha
25-02-2005, 01:40 PM
வாசித்து பதில் பதித்தமைக்கு நன்றிகள்.

பாரதி
25-02-2005, 02:46 PM
கவிதை நன்றாக இருக்கிறது கவி. பாராட்டுக்கள்.
எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??

thamarai
25-02-2005, 06:12 PM
கவிதை வித்தியாசமான கோணத்தில்...
வாழ்த்துக்கள்.... கவிதா.

thamarai
25-02-2005, 06:13 PM
எனக்கும் கவிதை எழுத வேண்டும் போல இருக்கிறதே...!
ஒரு வேளை விழுந்தது எழத்தானோ...??
உங்கள் கவிதையையும் எதிர்பார்த்தபடியே...

kavitha
26-02-2005, 11:18 PM
உடனே இங்கேயே எழுதியிருக்கலாமே பாரதி..?!! விரைவில் பதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

"கவிதை வித்தியாசமான கோணத்தில்...
வாழ்த்துக்கள்.... கவிதா."



நன்றி தாமரை

mythili
01-03-2005, 03:12 AM
கேள்வியும் அதற்கு பதிலும் அருமை.

அன்புடன்,
மைதிலி

pradeepkt
01-03-2005, 04:53 AM
நன்றி மைதிலி,