சொ.ஞானசம்பந்தன்
06-04-2012, 06:55 AM
( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர் . அவள் வருவது தெரிகிறது )
ஒரேஸ்தஸ் - அன்னை ..நாம் என்ன செய்யவேண்டும் ? கொல்வது ?
எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து ?
ஒ - இல்லை , ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை ?
எ - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை .
ஒ - அப்பொல்லோ , எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் ?
எ - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி ?
ஒ - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக ?
எ - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க ?
ஒ - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு
!எ - தெய்வக் குற்றம் ஆகும் , தந்தைக்கு உதவாவிட்டால் .
ஒ - அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும் .
எ - என்ன விலை தந்தைக்கு , பழி தீர்க்காவிடில் ?
ஒ - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு , கடவுளின் பெயரில் .
எ புனித முக்காலியில் அமர்ந்தா ?
ஒ - ஒரு நாளும் ஒப்பமாட்டேன் , அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை .
எ - ஆக , கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை .
ஒ ( நீண்ட யோசனைக்குப் பின்பு)
அப்படியானால் சரி , எப்படிச் செய்வேன் ? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா ?
( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர் .)
-----------------------------------------------------------------------------------------------
ஒரேஸ்தஸ் - அன்னை ..நாம் என்ன செய்யவேண்டும் ? கொல்வது ?
எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து ?
ஒ - இல்லை , ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை ?
எ - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை .
ஒ - அப்பொல்லோ , எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் ?
எ - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி ?
ஒ - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக ?
எ - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க ?
ஒ - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு
!எ - தெய்வக் குற்றம் ஆகும் , தந்தைக்கு உதவாவிட்டால் .
ஒ - அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும் .
எ - என்ன விலை தந்தைக்கு , பழி தீர்க்காவிடில் ?
ஒ - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு , கடவுளின் பெயரில் .
எ புனித முக்காலியில் அமர்ந்தா ?
ஒ - ஒரு நாளும் ஒப்பமாட்டேன் , அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை .
எ - ஆக , கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை .
ஒ ( நீண்ட யோசனைக்குப் பின்பு)
அப்படியானால் சரி , எப்படிச் செய்வேன் ? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா ?
( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர் .)
-----------------------------------------------------------------------------------------------