PDA

View Full Version : வளரும் கவி



sridhara
03-08-2011, 10:09 PM
தமிழோடு தமிழ்மொழி வாழ்க !
தமிழ்மொழியோடு நற்குணமது வாழ்க !
நற்குணமோடு நல்லெண்ணங்கள் வாழ்க !
நல்லெண்ணத்தோடு தூயகருத்துகள் வாழ்க !
தூயகருத்தோடு கற்பனைகள் வாழ்க !

நற்கவிதைகள் என்னுள் சுரக்க வைக்கும்
என் தாயே ! என் உயிரே ! என் தமிழே !

நீ வாழ்க !

வாழ்க தமிழ் !

-ஸ்ரீ



(வளரும்கவி ஆதலால் பிழை இருந்தால் மன்னிக்கவும் )

M.Jagadeesan
04-08-2011, 03:27 AM
வளரும் கவிக்கு என் வாழ்த்துக்கள்! " சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்" என்று சொல்வார்கள். கவிதைகளைத் தொடர்ந்து எழுத, எழுத உயர்ந்த கவிதைகள் உள்ளத்தில் ஊறும்.

கீதம்
04-08-2011, 11:16 AM
தமிழைத் துதி செய்து களம் இறங்கியுள்ளீர்கள். விரைவில் ஏற்றம் பெற என் வாழ்த்துகள். கவிதைப் பயிற்சிக்கென்றே பல திரிகள் மன்றத்தில் உண்டு. கற்றுத் தேருக, கவிமழை பொழிக!

சிவா.ஜி
04-08-2011, 02:12 PM
இளங்கவிக்கு இனிய வாழ்த்துக்கள். நல்கவியென அனைவரும் போற்ரும் நிலையெய்த வாழ்த்துக்கள் ஸ்ரீதரா.

Nivas.T
04-08-2011, 05:26 PM
நல்ல கவிதை

இதுபோல் தொடர்ந்து அசத்துங்கள்

வாழ்த்துக்கள் ஸ்ரீதரா

நாஞ்சில் த.க.ஜெய்
04-08-2011, 05:30 PM
தூய தமிழில் ஒரு இனிய கவிதை ..என் இனிய வாழ்த்து அறிமுக கவியே...

dellas
04-08-2011, 05:43 PM
வாழ்த்துக்கள், தூய தமிழில் கவி பாடியதற்கு.

sridhara
17-05-2012, 02:38 PM
thank u for every one

அமரன்
17-05-2012, 09:26 PM
thank u for every one
தமிழைப் பாடிய தாங்கள் தமிழில் தட்டச்ச தடுமாறுகிறீர்கள் போலும்.

எவ்வகையில் நாம் உதவ வேண்டும் எனச் சொல்லுங்கள் ஸ்ரீ.

தமிழ் கொண்டு நீங்கள் வடித்த கவிதை மழலைத் தமிழ் போல் சுவைக்கிறது.

பாராட்டுகளும் வாழ்த்தும்.

vasikaran.g
18-05-2012, 04:01 AM
கன்னி முயற்சி ..
வளர் பிறை ..
நன்று ..