naankarthikeyan
17-05-2012, 10:01 AM
சில வரிகளில், உனை எழுத
வலிய வார்த்தைகள் இல்லை.
உனைக் கொண்டாட பிறந்ததேதி
இல்லை - உலக தினங்கள்
இருப்பதாயும் அறிந்ததில்லை.
உன்னுடன் நானும் இல்லை!
உனக்கான வருத்தங்களைக் கூட
அபத்தங்கள் என்கிறார்கள்.
கைபற்றி செல்ல - பழஞ்சரித்திரக்
கதை பேச - ஏது காலமோ?
எங்கும் பதியாத, எதிர்பார்ப்பு
இல்லாத, எல்லையும் இலா
உன் பாசத்தை எப்படி எழுத?
தள்ளாத வயதிலும் - தன்
நம்பிக்கை தளராத - என்
பாட்டி அலமேலு அம்மாள்.
வலிய வார்த்தைகள் இல்லை.
உனைக் கொண்டாட பிறந்ததேதி
இல்லை - உலக தினங்கள்
இருப்பதாயும் அறிந்ததில்லை.
உன்னுடன் நானும் இல்லை!
உனக்கான வருத்தங்களைக் கூட
அபத்தங்கள் என்கிறார்கள்.
கைபற்றி செல்ல - பழஞ்சரித்திரக்
கதை பேச - ஏது காலமோ?
எங்கும் பதியாத, எதிர்பார்ப்பு
இல்லாத, எல்லையும் இலா
உன் பாசத்தை எப்படி எழுத?
தள்ளாத வயதிலும் - தன்
நம்பிக்கை தளராத - என்
பாட்டி அலமேலு அம்மாள்.