PDA

View Full Version : பதியாத பாசம் - "நான்" கார்த்திகேயன்.



naankarthikeyan
17-05-2012, 10:01 AM
சில வரிகளில், உனை எழுத
வலிய வார்த்தைகள் இல்லை.
உனைக் கொண்டாட பிறந்ததேதி
இல்லை - உலக தினங்கள்
இருப்பதாயும் அறிந்ததில்லை.
உன்னுடன் நானும் இல்லை!
உனக்கான வருத்தங்களைக் கூட
அபத்தங்கள் என்கிறார்கள்.
கைபற்றி செல்ல - பழஞ்சரித்திரக்
கதை பேச - ஏது காலமோ?
எங்கும் பதியாத, எதிர்பார்ப்பு
இல்லாத, எல்லையும் இலா
உன் பாசத்தை எப்படி எழுத?
தள்ளாத வயதிலும் - தன்
நம்பிக்கை தளராத - என்
பாட்டி அலமேலு அம்மாள்.

மஞ்சுபாஷிணி
17-05-2012, 10:26 AM
கடைசி வரி தான் கவிதைக்கு பலம் சேர்க்கும் மிக அருமையான கவிதை....

அன்பினை மட்டுமே கொடுத்த பாட்டி அலமேலு அம்மாளுக்கு என் மனம் நிறைந்த நமஸ்காரங்கள்...

இதோ பேரன் பாட்டியின் மீதுள்ள அன்பை இத்தனை அழகான கவிதையில் வெளிப்படுத்தி இருக்காரே...

அன்பு வாழ்த்துகள் கார்த்திகேயன்.. பாட்டியின் ஆசி என்றும் உங்களுக்கு கிடைக்க என் பிரார்த்தனைகள்.

naankarthikeyan
18-05-2012, 01:56 PM
நன்றி மஞ்சுபாஷிணி அவர்களே.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், வழிபாட்டுக்கும் நன்றிகள் பல.