View Full Version : மனித வாழ்வு
மனித வாழ்வு
தேவைகள் அதிகமானால்
தேடல்கள் அதிகமாகும்.
சோதனை தொடர்ந்திடும்கால்
சோர்வுகள் அலைக்கழிக்கும்
சாதகம் இல்லையென்றால்
பாதகம் செய்ய தயங்காமாந்தரிடம்
வேதனைஎன்று சென்றால்
போதனை செய்தே கொல்வார்
வாதைகள் அனைத்தும் வென்று
சாதனை செய்யும் நாளில்
மேதை நீ என்றே சொல்வாரவர்
புகழ் போதைக்கு நீயும் மயங்கி
பேதை நீ யாகிடும்கால்
தேவைகள் அதிகமாகும்
மீண்டும் தேடல்கள்
உன்னை சுழற்றும்.
மஞ்சுபாஷிணி
16-05-2012, 11:18 AM
மிக அருமையான வரிகள் ஹேகா....
உணர்ந்து சிந்தித்து எழுதிய ஆழ்சிந்தனை வரிகள் மிக அருமை...
உண்மையை சொல்லிச்செல்லும் கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள்....
M.Jagadeesan
16-05-2012, 11:21 AM
தேவைகள் அதிகமானால், துன்பங்கள் அதிகமாகும்.
தேவைகள் குறைந்தால் , இன்பங்கள் அதிகமாகும்.
தேவைகளும், தேடல்களும் மனிதனை இயக்குகின்றன.
கவிதை மிகவும் நன்று ஹேகா அவர்களே!
கீதம்
16-05-2012, 12:51 PM
தேடல்களும் தேவைகளும் சுழற்சி முறையில் வாழ்க்கையை சுழற்றியடிக்கும் வேடிக்கையை, வேதனையை கவித்துவமாய் வழங்கியிருக்கும் அழகினை மெச்சுகிறேன். பாராட்டுகள் ஹேகா.
Dr.சுந்தரராஜ் தயாளன்
16-05-2012, 03:40 PM
மிகவும் அருமையான வரிகள் ஹேகா அவர்களே:)
vasikaran.g
18-05-2012, 03:54 AM
அனுபவ வரிகள் ,
உணர்தவர் சிலர்
உணராதவர் உளர்
இன்னும் பலர் ..
நன்று ..
மிக அருமையான வரிகள் ஹேகா....
உணர்ந்து சிந்தித்து எழுதிய ஆழ்சிந்தனை வரிகள் மிக அருமை...
உண்மையை சொல்லிச்செல்லும் கவிதை வரிகளுக்கு அன்பு வாழ்த்துகள்....
நன்றிகள் மஞ்சு அக்கா
தேவைகள் அதிகமானால், துன்பங்கள் அதிகமாகும்.
தேவைகள் குறைந்தால் , இன்பங்கள் அதிகமாகும்.
தேவைகளும், தேடல்களும் மனிதனை இயக்குகின்றன.
கவிதை மிகவும் நன்று ஹேகா அவர்களே!
நன்றிகள் ஜெகதீசன் ஐயா.
தேடல்களும் தேவைகளும் சுழற்சி முறையில் வாழ்க்கையை சுழற்றியடிக்கும் வேடிக்கையை, வேதனையை கவித்துவமாய் வழங்கியிருக்கும் அழகினை மெச்சுகிறேன். பாராட்டுகள் ஹேகா.
நன்றிகள் கீதம் அக்கா.
மிகவும் அருமையான வரிகள் ஹேகா அவர்களே:)
நன்றி ஐயா
அனுபவ வரிகள் ,
உணர்தவர் சிலர்
உணராதவர் உளர்
இன்னும் பலர் ..
நன்று ..
அருமை. உணரும் நேரம் உயிர்ப்பும் உணரபடாமல் போகுமோ
எதையோ தேடி
எங்கோ அலைந்து
தேடல் முடிவுற்றதென
நினைக்கும் நேரம்
முடிவுறுவது
தேடலில்லை.
உயிர்ப்பும்
உணர்வுமே..
vasikaran.g
03-06-2012, 07:21 AM
ஆடலும்
தேடலும்
ஊடலும்
ஓடலும்
நிற்பதில்லை
நம் உயிர்
நிற்கும்வரை ..