சொ.ஞானசம்பந்தன்
15-05-2012, 06:11 AM
கிரியன் - செய்தாயாநீ யதனை ? ஏற்கிறாயா , மறுக்கிறாயா ?
ஏந்த்திகெனி - சொல்கிறேன் ; செய்தேன்தான் , மறுக்க வில்லை .
கிரி செய்யத் தடையாணை இருந்தது தெரியும்?
ஏந்த்தி தெரியும் ; எப்படித் தெரியாமல் போகும் ?
பொதுஅறிவிப் பல்லவோ ?
கிரி இருப்பினும் மீறத் துணிச்சல் கொண்டாய் ?
ஏந்த்தி நிச்சயமாய்.
அதற்குக் கட்டளை இட்டது சீயசல்ல;
கீழுலகத் தெய்வங்க ளோடுறையும் திக்கே
மாந்தர்க்கு வரையறுத்த சட்டமன்று என்சட்டம் .
மேலும்நான் எண்ணவில்லை எழுதாத சட்டங்களை,
கடவுளரின் நிலையான சட்டங்களை மீறுதற்கு
மானிடனை உன்சட்டம் அனுமதிக்க முடியுமென .
ஏனென்றால் இன்றிருந்தோ நேற்றிருந்தோ அல்ல
எப்போதும் அமலாகும் அச்சட் டங்கள்.
மனிதன் ஒருவனின் தீர்மானம் நினைந்தஞ்சி
தெய்வத் தின்முன் தண்டனைநான் பெறமாட்டேன்
நான்சாக வேண்டும் அறிவேன் முன்னமே .
-- அறியாமல் இருப்பது எப்படி ? --
அதற்குன்றன் அறிவிப்பு தேவை யில்லை.
ஆனால் அகால மரணம் அடைவதால்
ஆதாயம் பெறுவதாய் எண்ணுகின் றேன்நான்
என்போல் படுமோசச் சூழலில் உழல்வார்
நன்மை சாவதில் எங்ஙனம் எய்தார் ?
எதுஎப் படியோ துன்பமன்று எனக்கு
விதியினிவ் விளைவை ஏற்றல் , இதுமெய் .
ஆனால் ஒருமகன் என்தாய்க்குப் பிறந்தவன்
அவனுடல் அடக்கம் ஆகாமை இறந்தபின்
அதுவே துயரமாய் இருக்கும் எனக்கு.
சோகந் தராது எனக்கு நேர்வது .
நடந்துகொண் டேன்நான் பைத்தியம் போலென்று
உனக்குத் தோன்றின் என்னைக் கிறுக்கி
என்பவன் கிறுக்கனா யிருத்தல் கூடும்
.....................................................................
சோதரனை அடக்கஞ்செய் தடைந்த பெருமையினும்
மேலான மதிப்பினை நான்பெறுவ தெப்படி ?
அங்கிருந்தார் அனைவரும் ஆதரித்தார் என்னை..
அச்சம் அவர்நாவை அடக்காமல் .இருந்தால்
அறிவித் திருப்பார் வெளிப்படை யாக.
_________________________________________________
குறிப்பு : 1 - திக்கே - நீதிதேவதை.
2 - அதற்குன்றன் - அதற்கு உன் தன் = அதற்கு உன்னுடைய.
ஏந்த்திகெனி - சொல்கிறேன் ; செய்தேன்தான் , மறுக்க வில்லை .
கிரி செய்யத் தடையாணை இருந்தது தெரியும்?
ஏந்த்தி தெரியும் ; எப்படித் தெரியாமல் போகும் ?
பொதுஅறிவிப் பல்லவோ ?
கிரி இருப்பினும் மீறத் துணிச்சல் கொண்டாய் ?
ஏந்த்தி நிச்சயமாய்.
அதற்குக் கட்டளை இட்டது சீயசல்ல;
கீழுலகத் தெய்வங்க ளோடுறையும் திக்கே
மாந்தர்க்கு வரையறுத்த சட்டமன்று என்சட்டம் .
மேலும்நான் எண்ணவில்லை எழுதாத சட்டங்களை,
கடவுளரின் நிலையான சட்டங்களை மீறுதற்கு
மானிடனை உன்சட்டம் அனுமதிக்க முடியுமென .
ஏனென்றால் இன்றிருந்தோ நேற்றிருந்தோ அல்ல
எப்போதும் அமலாகும் அச்சட் டங்கள்.
மனிதன் ஒருவனின் தீர்மானம் நினைந்தஞ்சி
தெய்வத் தின்முன் தண்டனைநான் பெறமாட்டேன்
நான்சாக வேண்டும் அறிவேன் முன்னமே .
-- அறியாமல் இருப்பது எப்படி ? --
அதற்குன்றன் அறிவிப்பு தேவை யில்லை.
ஆனால் அகால மரணம் அடைவதால்
ஆதாயம் பெறுவதாய் எண்ணுகின் றேன்நான்
என்போல் படுமோசச் சூழலில் உழல்வார்
நன்மை சாவதில் எங்ஙனம் எய்தார் ?
எதுஎப் படியோ துன்பமன்று எனக்கு
விதியினிவ் விளைவை ஏற்றல் , இதுமெய் .
ஆனால் ஒருமகன் என்தாய்க்குப் பிறந்தவன்
அவனுடல் அடக்கம் ஆகாமை இறந்தபின்
அதுவே துயரமாய் இருக்கும் எனக்கு.
சோகந் தராது எனக்கு நேர்வது .
நடந்துகொண் டேன்நான் பைத்தியம் போலென்று
உனக்குத் தோன்றின் என்னைக் கிறுக்கி
என்பவன் கிறுக்கனா யிருத்தல் கூடும்
.....................................................................
சோதரனை அடக்கஞ்செய் தடைந்த பெருமையினும்
மேலான மதிப்பினை நான்பெறுவ தெப்படி ?
அங்கிருந்தார் அனைவரும் ஆதரித்தார் என்னை..
அச்சம் அவர்நாவை அடக்காமல் .இருந்தால்
அறிவித் திருப்பார் வெளிப்படை யாக.
_________________________________________________
குறிப்பு : 1 - திக்கே - நீதிதேவதை.
2 - அதற்குன்றன் - அதற்கு உன் தன் = அதற்கு உன்னுடைய.