PDA

View Full Version : இன்னா தாண்டி இனிய காண்க



நாகரா
14-05-2012, 11:08 AM
சிமெண்ட் பெயர்ந்த இடைவெளியில்
மண்ணின் மகத்துவம் பறைசாற்றும்
சிறு புல் நுனியைத்
தன் பூட்ஸ் காலால்
மிதித்து நடக்கிறது
மனித யந்திரம்

"இன்னாதம்ம இவ்வுலகம்
இனிய காண்க இயல்புணர்ந்தோரே"
பக்கத்து இடைவெளியில்
பக்குடுக்கை நன்கணியாரின்
புற நானூற்று
அறத்தை வாழ்ந்து காட்டுகிறது
இன்னொரு பசும்புல்

vasikaran.g
18-05-2012, 04:08 AM
மெல்லிய
இதயம்
சிந்திய
உதிரம்
இந்த
கவிதை ..

யோசிக்க
வேண்டிய
பிறர்
உணர்வுகளை
பூசிக்க
வேண்டிய
தருணம்
இது ..

நன்று ..

நாகரா
11-06-2012, 04:18 AM
உம் அழகுப் பின்னூட்டத்துக்கு நன்றி வசிக்கரன்