சொ.ஞானசம்பந்தன்
11-05-2012, 07:15 AM
யாரோ அடக்கம் செய்துவிட்டதாய்க் காவற்காரருள் ஒருவர் வந்து சொன்னதைக் கேட்ட கிரியன் :
எதிர்ப்பாளர் நெடுநாளாய் உள்ளனர் இவ்வூரில்;.
என்மீது குற்றம் சுமத்து பவர்கள்.
மறைவாய்த் தலையை ஆட்டிக் கடிவாளம்
மறுக்கின் றார்கள் வாயில்வைத் திருக்க.
அவர்தம் கடமையோ என்னடி பணிதல் .
அறிவேன் நன்றாய் அவர்கள்தான் பணந்தந்து
இந்தச் செயலைச் செய்வித்தார் என்பதை .
ஏனெனில் மக்களுக்கு ஏதுமிலை பணம்போல்.
அதனினும் தீயது வேறெதுவும் படரவில்லை.
அதுதான் நகரங் களையே அழிப்பது;
மனைகளைத் துறக்க மாந்தரைத் தூண்டுவது ;
மனிதரின் தூய இதயங் களையும்
கெடுத்துத் தகாத செயல்புரிய வைப்பது ;
எதனைச் செய்யவும் தயங்காக் கயமையும்
பயபக்தி யின்றி ஒழுகும் புத்தியும்
மானிடர்க் கதுதான் கற்பிக் கின்றது .
ஆனால் இதையெலாம் காசுக்குச் செய்தவர்
விலைதர வேண்டியவர் என்றேனும் ஒருநாள் .
மற்றபடி நானின்னம் சீயசின் பகதனெனில்
உன்னிடம் சொல்கிறேன் உரைக்கிறேன் வஞ்சினம் :
தன்கையால் அடக்கஞ் செய்த ஆலை
நீங்கள் கண்டறி வதற்கும் என்முன்
நிறுத்து வதற்கும் தவறுவீ ராயின்
ஹேடீசிடம் உங்களை யனுப்புமுன் தொங்க
விடுவேன் உயரே கைகளைக் கட்டி .
-----------------------------------------------
குறிப்பு : ஹேடீஸ் - நம் எமனுக்கு நிகரான தெய்வம்.
எதிர்ப்பாளர் நெடுநாளாய் உள்ளனர் இவ்வூரில்;.
என்மீது குற்றம் சுமத்து பவர்கள்.
மறைவாய்த் தலையை ஆட்டிக் கடிவாளம்
மறுக்கின் றார்கள் வாயில்வைத் திருக்க.
அவர்தம் கடமையோ என்னடி பணிதல் .
அறிவேன் நன்றாய் அவர்கள்தான் பணந்தந்து
இந்தச் செயலைச் செய்வித்தார் என்பதை .
ஏனெனில் மக்களுக்கு ஏதுமிலை பணம்போல்.
அதனினும் தீயது வேறெதுவும் படரவில்லை.
அதுதான் நகரங் களையே அழிப்பது;
மனைகளைத் துறக்க மாந்தரைத் தூண்டுவது ;
மனிதரின் தூய இதயங் களையும்
கெடுத்துத் தகாத செயல்புரிய வைப்பது ;
எதனைச் செய்யவும் தயங்காக் கயமையும்
பயபக்தி யின்றி ஒழுகும் புத்தியும்
மானிடர்க் கதுதான் கற்பிக் கின்றது .
ஆனால் இதையெலாம் காசுக்குச் செய்தவர்
விலைதர வேண்டியவர் என்றேனும் ஒருநாள் .
மற்றபடி நானின்னம் சீயசின் பகதனெனில்
உன்னிடம் சொல்கிறேன் உரைக்கிறேன் வஞ்சினம் :
தன்கையால் அடக்கஞ் செய்த ஆலை
நீங்கள் கண்டறி வதற்கும் என்முன்
நிறுத்து வதற்கும் தவறுவீ ராயின்
ஹேடீசிடம் உங்களை யனுப்புமுன் தொங்க
விடுவேன் உயரே கைகளைக் கட்டி .
-----------------------------------------------
குறிப்பு : ஹேடீஸ் - நம் எமனுக்கு நிகரான தெய்வம்.