சிவா.ஜி
08-05-2012, 06:24 PM
சென்னையிலிருந்து சிங்கப்பூர் வழியாக தென்கொரியா தலைநகரம் சியோலுக்குப் போகும் அந்த விமானத்தில் தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்தவரை, போர்டிங் கார்ட் வாங்குமிடத்திலேயே பார்த்திருந்தான் புகழேந்தி. அவன் பணிபுரியும் நிறுவனத்தால் அலுவலக வேலையாய் சியோலுக்கு அனுப்பட்டு, பயணிக்கிறான். ஐம்பது சொச்ச வயதிலிருந்த அவரது செயல்களில் இருந்த சிறிதான தடுமாற்றம் அவரைக் கவனிக்க வைத்தது. சந்திரமுகி படத்தில் கொலுசைப் பற்றி ரஜினி பேசும்போது ஜோதிகாவின் முகம் மாறுமே அந்த பாவனை அவரது முகத்தில் அடிக்கடி வந்து போனது. அவரது உள்ளுக்குள் ஏதோ ஒன்று அடிக்கடி அவரை அப்படி மாற்றுகிறது என்று தெரிந்தது. இருக்கையில் வந்து அமர்ந்தவுடன் சீட் பெல்ட்டை மாட்டிக் கொண்டார்...சற்று நேரம் கழித்து மீண்டும் அவிழ்த்தார். முன் இருக்கையின் பின்னாலிருந்தப் பையிலிருந்த புத்தகத்தை எடுத்தார்...சட சடவென பக்கங்களைப் புரட்டினார். மீண்டும் மூடி அதற்குள்ளேயே வைத்துவிட்டார்.
அவரது அந்த செய்கைகளை நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்த புகழேந்தி, அவர் ஏதோ தொந்தரவான சிந்தனைகளின் துரத்தலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அவரிடம் பேச வேண்டுமென்ற ஆர்வத்துடன்,
“ஹலோ சார், ஐயேம் புகழேந்தி, சியோலுக்கு போறேன்...நீங்களும் சியோலுக்கா?”
சட்டென்று அவன் பேசவும், அவரது பார்வையில் லேசான திடுக்கிடல் தெரிந்தது. அவர் அதை எதிர்பார்க்கவில்லையென்பது தெரிந்தது. சற்றுநேரம் அவனை உற்றுப் பார்த்தவர் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டத்தொடங்கினார். புகழேந்தி ஒருவிதத்தில் அவரது இந்த செய்கையை எதிர்பார்த்திருந்தான்.. புன்னகையுடன் தனது அலைபேசியை எடுத்து உயிரிழக்க வைத்தான். பெல்ட்டைக் கட்டிக்கொண்டான். அவன் செய்வதை ஓரக் கண்ணால் பார்த்த அவரும் அவசரமாய் தனது அலைபேசியை எடுத்து அணைத்தார். இரவுநேரப் பயணம் என்பதாலும், விமானத்துக்குள் குளிர் அதிகமாய் இருந்ததாலும், பணிப்பெண்ணை அழைத்து போர்த்திக்கொள்ள போர்வைக் கேட்டான். கொண்டுவந்து கொடுத்தவளிடம், அவரும் போர்வைக் கேட்டார். புகழேந்தி லேசாய் சிரித்துக்கொண்டான்.
விமானம் எந்தக் குலுங்கலும் இல்லாமல் நகரத்தொடங்கியதும், விமானத்துக்குள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளக்கத்தை மூன்று பணிப்பெண்கள் இயந்திரமாய் சொல்லத் தொடங்கினார்கள். விமானம் வேகம் கூட்டி மேலெழுந்தது. தனது மூக்கை சற்றே மேலே தூக்கி சரிவாய் உயரம் கூட்டியது. சற்று நேரத்துக்குப் பிறகு தனது பைசா கோபுர நிலையிலிருந்து, படுத்துக்கொண்ட நிலைக்கு வந்ததும், சீட்பெல்ட்டை கழற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்ததும், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவரைப் போல அவசரமாய் பெல்ட்டைக் கழற்றிவிட்டு, வேகமாய் விமானத்தின் பின் பக்கத்திற்குப் போனவரை திரும்பிப்பார்த்தான் புகழேந்தி. கழிவறைக்குப் போகிறார்போலிருக்கிறது என நினைத்தவனின் எண்ணம் தவறு என்பது அவர் கையில் விஸ்கி நிரம்பிய கோப்பையுடன் வந்து அமர்ந்ததும் தெரிந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அவர்களே தேவைப்படும் அனைவருக்கும் வழங்குவார்கள். ஆனால் இவரோ அதுவரைக் கூடக் காத்திருக்க இயலாமல் நேரிடையாய் சென்று வாங்கி வந்துவிட்டிருக்கிறார். அவரைத் துரத்தும் அந்த ஏதோ ஒன்றின் ஆக்ரமிப்பிலிருந்து தாற்காலிகமாய் தப்பித்துக்கொள்ள போதையைத் துணைக்கழைக்கிறாரா...அல்லது...தீவிரக்குடியரா......யோசித்துக்கொண்டிருந்தவன் அவர் அடுத்து செய்ததைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். விஸ்கி நிரம்பிய அந்தக் கோப்பையை தனக்கு முன்னாலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு, கண்களை இறுக மூடிக்கொண்டார். வாய் எதையோ முணுமுணுத்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சட்டென்று கண் திறந்தவர் கோப்பையை எடுத்து ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக்கொண்டு தலையை சிலுப்பிக்கொண்டார். உடல் லேசாய் குலுங்கியது. தலைக்கு மேலிருந்த அழைப்பு மணியை அழுத்தினார். வந்து நின்ற பணிப்பெண்னிடம் இன்னுமோர் கோப்பைக் கேட்டார். கொண்டு வந்து கொடுத்ததும், அதையும் ஒரே மடக்கில் குடித்தார்.
இப்போது அவரது முகத்தில் அந்த ஜோதிகாத்தனம் இல்லை. அமைதியாய் இருந்தது. புகழேந்தியைத் திரும்பிப்பார்த்தவர்,
“ஹை, ஐயேம் பாஸ்கரன். நானும் சியோலுக்குத்தான் போறேன். ஆனா என் குடும்பம் நான் மஸ்கட் போறதாத்தான் நினைச்சிக்கிட்டிருக்காங்க. நான் அங்கருந்து லீவுல வந்துட்டு திரும்பப்போறதா என் பொண்டாட்டி நினைச்சிக்கிட்டிருக்கா...ஆனா நான் அங்க இருக்கும்போதே இந்த வேலைக்கான இண்டர்வியூல கலந்துகிட்டு செலக்ட் ஆகி இப்ப சியோலுக்குப் போறேங்கறது அவளுக்கும் என் பையனுங்களுக்கும் தெரியாது. அவ்ளோ சீக்ரெட்டா இதையெல்லாம் செஞ்சேன்”
இதை சொல்லும்போது அவரது கண்கள் லேசான குரூரத்தைக் காட்டியது.
தான் அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனம் காத்தவர்...தான் கேட்காமலேயே இப்படி கொட்டித் தீர்ப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யமே வரவில்லை. அதேபோல இவன் எந்த பதிலும் சொல்லாவிட்டாலும் அவர் இன்னும் பேசுவார் என்று அவனுக்குத் தெரியும். பேசினார்,
“கொஞ்ச நாளா என் மனசுக்குள்ளேயே தர்க்கம் பண்ணி, நிறைய யோசிச்சு....ஒரு அவஸ்தையில இருந்தேன். நான் செய்யப்போறதைப் பத்தி யார்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசனும்ன்னு தோணுச்சு...நீங்க யாரோ...இனி சந்திப்போமா தெரியாது...அதான் இதையெல்லாம் உங்கக்கிட்ட சொல்றேன். என்னடா இவன் குடும்பத்துக்குக் கூட தெரியாம வேற நாட்டுக்குப் போறானேன்னு நினைக்கிறீங்களா...எல்லாரும் கண்டிப்பா அப்படித்தான் நினைப்பாங்க. வெறுத்துப் போயிட்டேன் சார். 27 வருஷமா வெளிநாட்டுல இருக்கேன். ஒரு சாதாரண டெக்னீஷியனாத்தான் மொதமொதல்ல வேலைக்குப் போனேன். அப்புறம் அதே கம்பெனியில மேனேஜரா ஆனேன். மொதல்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி ஊருக்கு வந்துகிட்டிருந்தேன்..அப்புறம் ஒரு வருஷமாச்சு, அதுக்கப்புறம் ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி.....”
எங்களை நெருங்கிவிட்ட குளிர்பான மற்றும் மதுபான வண்டியைப் பார்த்ததும், அவர்கள் கேட்காமலேயே,
“ஒன் விஸ்கி வித் சோடா”
எனக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு,
“நீங்க குடிக்கமாட்டீங்களா?”
“குடிப்பேன் சார். எப்பயாவது பார்ட்டியிலதான். ஆனா ட்ராவல்ல குடிக்கிற பழக்கம் இல்ல”
என்றதும்,
“நான் ட்ராவல்ல நிறைய குடிப்பேன். வீக் எண்ட்ல ரூம்ல குடிப்பேன், பர்மிட் வெச்சிருக்கேன்...மூணு வருஷம் முன்னால வரைக்கும் வீட்டுக்கு லீவுல போகும்போதும் நான் வாங்கிட்டுப் போற பாட்டிலை சனி, ஞாயிறுல குடிப்பேன். அதுக்கும் வேட்டு வெச்சிட்டா சார் என் பொண்டாட்டி. பசங்க வளர்ந்துட்டாங்களாம்...அவங்க முன்னாடி குடிச்சா அவங்களுக்கும் அந்தக் கெட்டப் பழக்கம் வந்துடுமாம்...இப்பல்லாம் பசங்களுக்கு யார் சார் சொல்லித்தரனும்...ஊர்ல பாருங்க பத்தாவது படிக்கிற பையன் டாஸ்மாக் கியூவுல நின்னு குவார்ட்டர் வாங்கிட்டுப் போய் பசங்களோட சேந்து அடிக்கிறான்..என்னவோ என் பசங்க குடிக்கவே குடிக்கறதில்லன்னு அவளுக்கு நெனப்பு...பெரியவன் இஞ்சினீரிங் செகண்ட் இயர் படிக்கிறான்..நான் இருக்கும்போதே ரெண்டு வாட்டி குடிச்சிட்டு வெங்காயம் சாப்ப்ட்டுட்டு, பாடி ஸ்ப்ரேவை ஃபுல்லா அடிச்சிக்கிட்டு வந்தான். என் பொண்டாட்டிக்கு வெங்காய வாசனையும், ஸ்ப்ரே வாசனையும்தான் தெரிஞ்சுது. ஆனா என்னை ஏமாத்த முடியுமா...ஆனாலும் நான் அவகிட்ட அத சொல்லல...அவ அவங்க மேல நம்பிக்கை வெச்சிருக்கா...வெச்சுட்டுப் போகட்டும்...”
சற்று நேரம் அமைதியாக இருந்தார். அதற்குள் அவரது கண்கள் நன்றாக சிவந்துவிட்டிருந்தன. மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசையில் ஜன்னல் பக்கமிருந்தவர்...எத்தனைநாள் தூக்கமில்லாமல் இருந்தாரோ...வந்து அமர்ந்ததும் தூங்க ஆரம்பித்தவர்...இன்னும் தூங்கிக்கொண்டே இருந்தார். நடுவிலிருந்த இருக்கையில் புகழேந்தி அமர்ந்திருந்தான்.
“விருந்தாளி வாழ்க்கை சார். எனக்குன்னு ஒரு கப்போர்ட் கூட இல்ல. நான் கொண்டுகிட்டு போற பெட்டிதான் நான் திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு கப்போர்ட். ரொம்பப்பேருக்கு என்னை யாருன்னே தெரியல...எதையாவது மனசு விட்டுப் பேசக்கூட ஃபிரண்டுங்க இல்ல. வைஃப்கிட்ட பேசலான்னா...பசங்களோட எதிர்காலம், வாங்கிப்போட்டிருக்கிற சொத்துங்க...அவங்க குடும்பத்துல நடக்குற விஷயங்க...அவ தங்கைக்கு பணம் வேணும்....இப்படிதான் பேசறா....கொஞ்சம் நெருக்கமா போனா....எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லீங்க...பசங்க பெரியவங்களாயிட்டாங்க...ஒரு வயசுக்கு மேல இதையெல்லாம் நிறுத்திடனும்...இது இருந்தாத்தான் நமக்குள்ள அந்நியோன்யம் இருக்குமா...இல்லாமலேயே சும்மா பேசிக்கிட்டிருந்தாலே போதுன்னு லெக்சர் அடிக்கிறா...52 வயசுல இதெல்லாம் தேவையில்லன்னு யார் சார் சொன்னது. நான் சொல்றது புரியுதுல்ல...ஹாங்... மனசு பூரா ஒரு வெறுமை வந்துடிச்சு. லாஸ்ட் சிக்ஸ் மன்த்தா நான் அவகிட்ட போன்லக்கூட ரொம்ப கம்மியாத்தான் பேசியிருக்கேன். மூணு மாசம் முன்னாடிதான் ஒரு பிலிப்பினோ ஆளை சந்திச்சேன். பொண்டாட்டி, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு தனியா ஜாலியா வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணிக்கிட்டிருக்கான். ஆறு மாசத்துக்கு ஒரு தடவ...லீவுல அவன் நினைச்ச நாட்டுக்குப் போறான் சந்தோஷமா ஜாலியா எஞ்ஜாய் பண்ணிட்டு உற்சாகமா திரும்பி வரான். இவ்வளவுக்கும் அவன் என்னைவிட அஞ்சு வயசு பெரியவன்...அதான் நானும் தீர்மானிச்சுட்டேன். போதும்...இவங்களுக்காக உழைச்சு சேத்தது. நான் இல்லன்னாலும் அவங்களால சந்தோஷமா வாழ முடியுற அளவுக்கு சொத்தும் பணமும் இருக்கு...இனிமே என்னோட வாழ்க்கையை நான் வாழப்போறேன்...சந்தோஷமா அனுபவிக்கப்போறேன்...கொரியாவுல காண்ட்ராக்ட் மேரேஜ் எல்லாம் இருக்காம்....”
இதை சொல்லும்போது மீண்டும் அவருக்கு அந்த ஜோதிகா முகபாவம் வந்துவிட்டது. புகழேந்தி இப்போது அதிர்ச்சியடைந்தான். என்ன ஒரு விபரீத முடிவு...எப்படி இப்படி இவரால் அனைத்தையும் விலக்கிவிட்டு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடிந்தது...எவ்வளவுதான் கசப்பு இருந்தாலும்...இந்த முடிவு சரியில்லையே...இதை எப்படி இவருக்குச் சொல்வது...சொன்னாலும் கேட்கும் மன நிலையில் இவர் இருக்கிறாரா....இருந்தாலும் பேசிப்பார்க்கலாம் என நினைத்தான்
சார்....வேண்டாம் சார். உங்க முடிவு சரியில்ல...இப்படி ஆரம்பிக்க நினைத்தவன் சட்டென்று மாற்றிக்கொண்டு,
“சார்...உங்க வேதனை புரியுது. இத்தனை வருஷமா இந்தக் குடும்பத்துக்காக உழைச்சவருக்கு அதுக்கு ஏத்த ட்ரீட்மெண்ட் கிடைக்கலன்னா மனசு வேதனைபடுந்தான். ஆனா ஒரு செகண்ட் நினச்சுப் பாருங்க...இப்போதைக்கு உங்க முடிவு சந்தோஷத்தக் குடுக்கும்...ஆனா...வயசாகி தளர்ந்துபோய்...ஆதரவு தேவைப்படற நேரத்துல உங்க பக்கத்துல யாருமே இருக்க மாட்டாங்களே சார்.....”
“காச தூக்கிப்போட்டா ஆயிரம் வேலக்காரங்க வருவாங்க நீங்க என்ன சார் உலகம் தெரியாம பேசிக்கிட்டிருக்கீங்க....இப்பவே என்னை உதாசீனப்படுத்துறவங்க நான் தளர்ந்து போயிட்டா எனக்கு ஆதரவா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? ஏதாவது ஹோம்லக் கொண்டுபோய் போட்டுடுவாங்க...என் பொண்டாட்டிக்கு அவளோட பசங்க எதிர்காலமும், அவங்க வாழ்க்கையும்தான் முக்கியம்..”
“சார் தப்பா எடுத்துக்காதீங்க...நீங்க உங்க வைஃப்ப சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கிறேன். நீங்க மட்டுமே இந்தக் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டதா நெனைக்காதீங்க...உங்க அளவுக்கு, இன்னும் சொல்லப்போனா உங்களவிட அதிகமா இழந்ததும், கஷ்டப்பட்டதும் உங்க மனைவிதான். இத்தனை வருஷமா உங்களைப் பிரிஞ்சிருந்து, தன்னோட சின்னச் சின்ன ஆசைகளைக் கூட அடக்கி வெச்சுக்கிட்டு, யாரோடையும் தன்னோட அந்தரங்க எண்ணங்களை பகிர்ந்துக்க முடியாம, பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி....நெனைச்சுப் பாருங்க சார்....அவங்களை இப்படி ஒரேயடியா உதறிட்டுப் போறது ரொம்ப தப்பு சார்”
“ஹலோ....எது தப்பு எது ரைட்டுன்னு எனக்குத் தெரியும். நல்ல பொஷிசனுக்கு வந்ததுக்கப்புறம் என்கூடவே வந்துடுங்க மஸ்கட்லயே இருக்கலாம்ன்னு நான் கூப்டப்ப அவ என்ன சொன்னா தெரியுமா....புள்ளைங்களோட படிப்பு இருக்கு, எங்க அப்பா அம்மாவை பாத்துக்க யாருமில்ல நாந்தான் பாத்துக்கனும், உங்க அப்பா வேற நம்மக் கூட இருக்கார், அவர யார் பாத்துக்குவாங்கன்னு கதை சொல்லி வரலன்னு சொல்லிட்டா...”
“நியாயம்தான சார்...பசங்க படிப்புக் கூட ஓக்கே...ஆனா வயசான உங்க அப்பாவப் பாத்துக்கனுன்னு சொன்னது சரிதான சார். அதுவுமில்லாம, அவங்க அப்பா அம்மாவையும் பாத்துக்கிற கடமையும் அவங்களுக்கு இருக்கில்ல...”
“அதுக்குன்னு...எனக்கும் குடும்பத்தோட இருக்கனுன்னு ஆசை இருக்காதா..?”
“சார்...அதுக்கு நீங்க அந்த வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கே வந்திருக்கனும்...கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி சார்? பொருளாதாரத்தை உயர்த்திக்கறதுக்காக வெளிநாட்டுல வேலை செய்யறது தப்பில்ல....ஆனா ஒரு அளவுக்கு உயர்ந்ததுக்கப்புறமும்...தொடர்ந்து அங்கேயே இருந்து எதுக்கு சார் வாழ்க்கையைத் தொலைக்கனும்?”
“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க...நான் ஆரம்பத்துல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன், எவ்ளோ அவமானங்கள சந்திச்சிருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா...இன்னைக்கு அத்தனைபேரும் என்னை மதிக்கிறானுங்கன்னா அதுக்குக் காரணம் இந்தப் பணமும், வசதியும்தான...இத்தனை வருஷம் வெளிநாட்டுல இருந்ததாலத்தான இதை அடைய முடிஞ்சுது?”
“ஒத்துக்கறேன் சார். ஆனா இப்ப நீங்க செய்யப்போற காரியத்தோட பின் விளைவுகளை யோசிச்சீங்களா...உங்களப் பொறுத்தவரைக்கும் நீங்க உங்க சொந்த விருப்பு வெறுப்புன்னு ரொம்ப சுயநலமா யோசிக்கிறீங்க. குடும்ப வாழ்க்கைங்கறது ஒரு கமிட்மெண்ட் சார். டக்குன்னு உதறித் தள்ளிட்டுப் போயிட முடியாது. புத்தரா மாறின சித்தார்த்தன் செஞ்சதும் தப்புதான். அவரோட மனைவி என்ன பாவம் பண்ணாங்க? அப்பா இருந்தும் இல்லாதவங்களா உங்க பிள்ளைங்களும், புருஷன் இருந்தும் இல்லாத விதவையா உங்க மனைவியும் வாழனுமா சார்? அடிபட்டவன் சொல்றேன் சார். சின்ன வயசுல எங்களை விட்டுட்டு எங்கப்பா ஓடிட்டாரு...அதுக்கப்புறம் என்னையும், என் தம்பி தங்கைகளையும் வளர்த்து ஆளாக்க எங்கம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா சார்..?”
“அந்த மாதிரி என் குடும்பம் கஷ்டப்பட தேவையில்ல....அதான் எல்லா வசதியும் இருக்கே....ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு புத்தர் சொன்னாரு...ஆனா அத்தனைக்கும் ஆசைப்படுன்னு இன்னொருத்தர் சொல்றாரு..ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு சொன்ன புத்தரை வணங்குற பக்கத்து நாட்டுக்காரங்க அழிக்கறதையே ஆசையா வெச்சுருக்காங்க...ஸோ...அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயங்கள். மன்னிச்சுடுங்க புகழேந்தி...இது எல்லாத்தையும் விட்டு விடுதலையாகி...சந்தோஷமான வாழ்க்கையை வாழறதுன்னு நான் தீர்மானிச்சுட்டேன்...இனி யாராலயும் அதை மாத்த முடியாது...குட்நைட்...”
பட்டென்று சொல்லிவிட்டு போர்வையை முழுக்க தலையோடுப் போர்த்திக்கொண்டு விட்டார்.
யாராலையும் மாத்தமுடியாதுன்னு ஈஸியா சொல்லிட்டாரு....ஆனா காலம் எல்லாத்தையும் மாத்தும்ன்னு அவருக்குப் புரியும்...என நினைத்துக்கொண்டே...நிகழ்ந்த உரையாடல்களின் தாக்கத்தில் தூக்கம் பிடிக்காமல் விழித்துக்கொண்டிருந்தான் புகழேந்தி.
புகழேந்தி நினைத்ததைப்போலவே காலம் அவரது முடிவை மாற்றித்தான் விட்டது. சியோலில் இருந்தபோது குடி அளவுக்கு மீறியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததும், அவரது நிறுவனத்தாரால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டதும், கையில் காசு இல்லாமல் அனைத்தையும் காண்ட்ராக்ட் பெண்ணிடம் இழந்து, அவர் தன் சொந்த வீட்டுக்கு வந்ததும், மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித் தப்பித்தவறிக்கூட குறிப்பிட்டுவிடாமல் அவரது மனைவி அவருக்கு ஆதரவாய் இருந்ததைப் பார்த்து...அந்த பிலிப்பினோ எவ்வளவு பாவம் செய்தவன்...தான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை பாஸ்கரன் உணர்ந்துகொண்டதையும் என்றாவது ஒருநாள் நிகழப்போகும் எதேச்சையான சந்திப்பில் புகழேந்தியும் தெரிந்துகொள்வான்.
அவரது அந்த செய்கைகளை நிதானமாகப் பார்த்துக்கொண்டிருந்த புகழேந்தி, அவர் ஏதோ தொந்தரவான சிந்தனைகளின் துரத்தலில் சிக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்தான். அவரிடம் பேச வேண்டுமென்ற ஆர்வத்துடன்,
“ஹலோ சார், ஐயேம் புகழேந்தி, சியோலுக்கு போறேன்...நீங்களும் சியோலுக்கா?”
சட்டென்று அவன் பேசவும், அவரது பார்வையில் லேசான திடுக்கிடல் தெரிந்தது. அவர் அதை எதிர்பார்க்கவில்லையென்பது தெரிந்தது. சற்றுநேரம் அவனை உற்றுப் பார்த்தவர் பதிலேதும் சொல்லாமல் மீண்டும் அந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டத்தொடங்கினார். புகழேந்தி ஒருவிதத்தில் அவரது இந்த செய்கையை எதிர்பார்த்திருந்தான்.. புன்னகையுடன் தனது அலைபேசியை எடுத்து உயிரிழக்க வைத்தான். பெல்ட்டைக் கட்டிக்கொண்டான். அவன் செய்வதை ஓரக் கண்ணால் பார்த்த அவரும் அவசரமாய் தனது அலைபேசியை எடுத்து அணைத்தார். இரவுநேரப் பயணம் என்பதாலும், விமானத்துக்குள் குளிர் அதிகமாய் இருந்ததாலும், பணிப்பெண்ணை அழைத்து போர்த்திக்கொள்ள போர்வைக் கேட்டான். கொண்டுவந்து கொடுத்தவளிடம், அவரும் போர்வைக் கேட்டார். புகழேந்தி லேசாய் சிரித்துக்கொண்டான்.
விமானம் எந்தக் குலுங்கலும் இல்லாமல் நகரத்தொடங்கியதும், விமானத்துக்குள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளின் விளக்கத்தை மூன்று பணிப்பெண்கள் இயந்திரமாய் சொல்லத் தொடங்கினார்கள். விமானம் வேகம் கூட்டி மேலெழுந்தது. தனது மூக்கை சற்றே மேலே தூக்கி சரிவாய் உயரம் கூட்டியது. சற்று நேரத்துக்குப் பிறகு தனது பைசா கோபுர நிலையிலிருந்து, படுத்துக்கொண்ட நிலைக்கு வந்ததும், சீட்பெல்ட்டை கழற்றிக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வந்ததும், அதற்காகவே காத்துக்கொண்டிருந்தவரைப் போல அவசரமாய் பெல்ட்டைக் கழற்றிவிட்டு, வேகமாய் விமானத்தின் பின் பக்கத்திற்குப் போனவரை திரும்பிப்பார்த்தான் புகழேந்தி. கழிவறைக்குப் போகிறார்போலிருக்கிறது என நினைத்தவனின் எண்ணம் தவறு என்பது அவர் கையில் விஸ்கி நிரம்பிய கோப்பையுடன் வந்து அமர்ந்ததும் தெரிந்தது.
இன்னும் சற்று நேரத்தில் அவர்களே தேவைப்படும் அனைவருக்கும் வழங்குவார்கள். ஆனால் இவரோ அதுவரைக் கூடக் காத்திருக்க இயலாமல் நேரிடையாய் சென்று வாங்கி வந்துவிட்டிருக்கிறார். அவரைத் துரத்தும் அந்த ஏதோ ஒன்றின் ஆக்ரமிப்பிலிருந்து தாற்காலிகமாய் தப்பித்துக்கொள்ள போதையைத் துணைக்கழைக்கிறாரா...அல்லது...தீவிரக்குடியரா......யோசித்துக்கொண்டிருந்தவன் அவர் அடுத்து செய்ததைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டான். விஸ்கி நிரம்பிய அந்தக் கோப்பையை தனக்கு முன்னாலிருந்த ட்ரேயில் வைத்துவிட்டு, கண்களை இறுக மூடிக்கொண்டார். வாய் எதையோ முணுமுணுத்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. சட்டென்று கண் திறந்தவர் கோப்பையை எடுத்து ஒரே மடக்கில் வாயில் ஊற்றிக்கொண்டு தலையை சிலுப்பிக்கொண்டார். உடல் லேசாய் குலுங்கியது. தலைக்கு மேலிருந்த அழைப்பு மணியை அழுத்தினார். வந்து நின்ற பணிப்பெண்னிடம் இன்னுமோர் கோப்பைக் கேட்டார். கொண்டு வந்து கொடுத்ததும், அதையும் ஒரே மடக்கில் குடித்தார்.
இப்போது அவரது முகத்தில் அந்த ஜோதிகாத்தனம் இல்லை. அமைதியாய் இருந்தது. புகழேந்தியைத் திரும்பிப்பார்த்தவர்,
“ஹை, ஐயேம் பாஸ்கரன். நானும் சியோலுக்குத்தான் போறேன். ஆனா என் குடும்பம் நான் மஸ்கட் போறதாத்தான் நினைச்சிக்கிட்டிருக்காங்க. நான் அங்கருந்து லீவுல வந்துட்டு திரும்பப்போறதா என் பொண்டாட்டி நினைச்சிக்கிட்டிருக்கா...ஆனா நான் அங்க இருக்கும்போதே இந்த வேலைக்கான இண்டர்வியூல கலந்துகிட்டு செலக்ட் ஆகி இப்ப சியோலுக்குப் போறேங்கறது அவளுக்கும் என் பையனுங்களுக்கும் தெரியாது. அவ்ளோ சீக்ரெட்டா இதையெல்லாம் செஞ்சேன்”
இதை சொல்லும்போது அவரது கண்கள் லேசான குரூரத்தைக் காட்டியது.
தான் அறிமுகப்படுத்திக்கொண்டபோது ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனம் காத்தவர்...தான் கேட்காமலேயே இப்படி கொட்டித் தீர்ப்பதைப் பார்த்து அவனுக்கு ஆச்சர்யமே வரவில்லை. அதேபோல இவன் எந்த பதிலும் சொல்லாவிட்டாலும் அவர் இன்னும் பேசுவார் என்று அவனுக்குத் தெரியும். பேசினார்,
“கொஞ்ச நாளா என் மனசுக்குள்ளேயே தர்க்கம் பண்ணி, நிறைய யோசிச்சு....ஒரு அவஸ்தையில இருந்தேன். நான் செய்யப்போறதைப் பத்தி யார்கிட்டயாவது மனசுவிட்டுப் பேசனும்ன்னு தோணுச்சு...நீங்க யாரோ...இனி சந்திப்போமா தெரியாது...அதான் இதையெல்லாம் உங்கக்கிட்ட சொல்றேன். என்னடா இவன் குடும்பத்துக்குக் கூட தெரியாம வேற நாட்டுக்குப் போறானேன்னு நினைக்கிறீங்களா...எல்லாரும் கண்டிப்பா அப்படித்தான் நினைப்பாங்க. வெறுத்துப் போயிட்டேன் சார். 27 வருஷமா வெளிநாட்டுல இருக்கேன். ஒரு சாதாரண டெக்னீஷியனாத்தான் மொதமொதல்ல வேலைக்குப் போனேன். அப்புறம் அதே கம்பெனியில மேனேஜரா ஆனேன். மொதல்ல ரெண்டு வருஷத்துக்கு ஒரு வாட்டி ஊருக்கு வந்துகிட்டிருந்தேன்..அப்புறம் ஒரு வருஷமாச்சு, அதுக்கப்புறம் ஆறு மாசத்துக்கு ஒரு வாட்டி.....”
எங்களை நெருங்கிவிட்ட குளிர்பான மற்றும் மதுபான வண்டியைப் பார்த்ததும், அவர்கள் கேட்காமலேயே,
“ஒன் விஸ்கி வித் சோடா”
எனக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டு,
“நீங்க குடிக்கமாட்டீங்களா?”
“குடிப்பேன் சார். எப்பயாவது பார்ட்டியிலதான். ஆனா ட்ராவல்ல குடிக்கிற பழக்கம் இல்ல”
என்றதும்,
“நான் ட்ராவல்ல நிறைய குடிப்பேன். வீக் எண்ட்ல ரூம்ல குடிப்பேன், பர்மிட் வெச்சிருக்கேன்...மூணு வருஷம் முன்னால வரைக்கும் வீட்டுக்கு லீவுல போகும்போதும் நான் வாங்கிட்டுப் போற பாட்டிலை சனி, ஞாயிறுல குடிப்பேன். அதுக்கும் வேட்டு வெச்சிட்டா சார் என் பொண்டாட்டி. பசங்க வளர்ந்துட்டாங்களாம்...அவங்க முன்னாடி குடிச்சா அவங்களுக்கும் அந்தக் கெட்டப் பழக்கம் வந்துடுமாம்...இப்பல்லாம் பசங்களுக்கு யார் சார் சொல்லித்தரனும்...ஊர்ல பாருங்க பத்தாவது படிக்கிற பையன் டாஸ்மாக் கியூவுல நின்னு குவார்ட்டர் வாங்கிட்டுப் போய் பசங்களோட சேந்து அடிக்கிறான்..என்னவோ என் பசங்க குடிக்கவே குடிக்கறதில்லன்னு அவளுக்கு நெனப்பு...பெரியவன் இஞ்சினீரிங் செகண்ட் இயர் படிக்கிறான்..நான் இருக்கும்போதே ரெண்டு வாட்டி குடிச்சிட்டு வெங்காயம் சாப்ப்ட்டுட்டு, பாடி ஸ்ப்ரேவை ஃபுல்லா அடிச்சிக்கிட்டு வந்தான். என் பொண்டாட்டிக்கு வெங்காய வாசனையும், ஸ்ப்ரே வாசனையும்தான் தெரிஞ்சுது. ஆனா என்னை ஏமாத்த முடியுமா...ஆனாலும் நான் அவகிட்ட அத சொல்லல...அவ அவங்க மேல நம்பிக்கை வெச்சிருக்கா...வெச்சுட்டுப் போகட்டும்...”
சற்று நேரம் அமைதியாக இருந்தார். அதற்குள் அவரது கண்கள் நன்றாக சிவந்துவிட்டிருந்தன. மூன்று பேர் அமரக்கூடிய அந்த வரிசையில் ஜன்னல் பக்கமிருந்தவர்...எத்தனைநாள் தூக்கமில்லாமல் இருந்தாரோ...வந்து அமர்ந்ததும் தூங்க ஆரம்பித்தவர்...இன்னும் தூங்கிக்கொண்டே இருந்தார். நடுவிலிருந்த இருக்கையில் புகழேந்தி அமர்ந்திருந்தான்.
“விருந்தாளி வாழ்க்கை சார். எனக்குன்னு ஒரு கப்போர்ட் கூட இல்ல. நான் கொண்டுகிட்டு போற பெட்டிதான் நான் திரும்பி வர்ற வரைக்கும் எனக்கு கப்போர்ட். ரொம்பப்பேருக்கு என்னை யாருன்னே தெரியல...எதையாவது மனசு விட்டுப் பேசக்கூட ஃபிரண்டுங்க இல்ல. வைஃப்கிட்ட பேசலான்னா...பசங்களோட எதிர்காலம், வாங்கிப்போட்டிருக்கிற சொத்துங்க...அவங்க குடும்பத்துல நடக்குற விஷயங்க...அவ தங்கைக்கு பணம் வேணும்....இப்படிதான் பேசறா....கொஞ்சம் நெருக்கமா போனா....எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லீங்க...பசங்க பெரியவங்களாயிட்டாங்க...ஒரு வயசுக்கு மேல இதையெல்லாம் நிறுத்திடனும்...இது இருந்தாத்தான் நமக்குள்ள அந்நியோன்யம் இருக்குமா...இல்லாமலேயே சும்மா பேசிக்கிட்டிருந்தாலே போதுன்னு லெக்சர் அடிக்கிறா...52 வயசுல இதெல்லாம் தேவையில்லன்னு யார் சார் சொன்னது. நான் சொல்றது புரியுதுல்ல...ஹாங்... மனசு பூரா ஒரு வெறுமை வந்துடிச்சு. லாஸ்ட் சிக்ஸ் மன்த்தா நான் அவகிட்ட போன்லக்கூட ரொம்ப கம்மியாத்தான் பேசியிருக்கேன். மூணு மாசம் முன்னாடிதான் ஒரு பிலிப்பினோ ஆளை சந்திச்சேன். பொண்டாட்டி, குடும்பம் எல்லாத்தையும் விட்டுட்டு தனியா ஜாலியா வாழ்க்கையை எஞ்ஜாய் பண்ணிக்கிட்டிருக்கான். ஆறு மாசத்துக்கு ஒரு தடவ...லீவுல அவன் நினைச்ச நாட்டுக்குப் போறான் சந்தோஷமா ஜாலியா எஞ்ஜாய் பண்ணிட்டு உற்சாகமா திரும்பி வரான். இவ்வளவுக்கும் அவன் என்னைவிட அஞ்சு வயசு பெரியவன்...அதான் நானும் தீர்மானிச்சுட்டேன். போதும்...இவங்களுக்காக உழைச்சு சேத்தது. நான் இல்லன்னாலும் அவங்களால சந்தோஷமா வாழ முடியுற அளவுக்கு சொத்தும் பணமும் இருக்கு...இனிமே என்னோட வாழ்க்கையை நான் வாழப்போறேன்...சந்தோஷமா அனுபவிக்கப்போறேன்...கொரியாவுல காண்ட்ராக்ட் மேரேஜ் எல்லாம் இருக்காம்....”
இதை சொல்லும்போது மீண்டும் அவருக்கு அந்த ஜோதிகா முகபாவம் வந்துவிட்டது. புகழேந்தி இப்போது அதிர்ச்சியடைந்தான். என்ன ஒரு விபரீத முடிவு...எப்படி இப்படி இவரால் அனைத்தையும் விலக்கிவிட்டு ஒரு வாழ்க்கையை தேர்ந்தெடுக்க முடிந்தது...எவ்வளவுதான் கசப்பு இருந்தாலும்...இந்த முடிவு சரியில்லையே...இதை எப்படி இவருக்குச் சொல்வது...சொன்னாலும் கேட்கும் மன நிலையில் இவர் இருக்கிறாரா....இருந்தாலும் பேசிப்பார்க்கலாம் என நினைத்தான்
சார்....வேண்டாம் சார். உங்க முடிவு சரியில்ல...இப்படி ஆரம்பிக்க நினைத்தவன் சட்டென்று மாற்றிக்கொண்டு,
“சார்...உங்க வேதனை புரியுது. இத்தனை வருஷமா இந்தக் குடும்பத்துக்காக உழைச்சவருக்கு அதுக்கு ஏத்த ட்ரீட்மெண்ட் கிடைக்கலன்னா மனசு வேதனைபடுந்தான். ஆனா ஒரு செகண்ட் நினச்சுப் பாருங்க...இப்போதைக்கு உங்க முடிவு சந்தோஷத்தக் குடுக்கும்...ஆனா...வயசாகி தளர்ந்துபோய்...ஆதரவு தேவைப்படற நேரத்துல உங்க பக்கத்துல யாருமே இருக்க மாட்டாங்களே சார்.....”
“காச தூக்கிப்போட்டா ஆயிரம் வேலக்காரங்க வருவாங்க நீங்க என்ன சார் உலகம் தெரியாம பேசிக்கிட்டிருக்கீங்க....இப்பவே என்னை உதாசீனப்படுத்துறவங்க நான் தளர்ந்து போயிட்டா எனக்கு ஆதரவா இருப்பாங்கன்னு நினைக்கிறீங்களா? ஏதாவது ஹோம்லக் கொண்டுபோய் போட்டுடுவாங்க...என் பொண்டாட்டிக்கு அவளோட பசங்க எதிர்காலமும், அவங்க வாழ்க்கையும்தான் முக்கியம்..”
“சார் தப்பா எடுத்துக்காதீங்க...நீங்க உங்க வைஃப்ப சரியா புரிஞ்சிக்கலன்னு நினைக்கிறேன். நீங்க மட்டுமே இந்தக் குடும்பத்துக்காக கஷ்டப்பட்டதா நெனைக்காதீங்க...உங்க அளவுக்கு, இன்னும் சொல்லப்போனா உங்களவிட அதிகமா இழந்ததும், கஷ்டப்பட்டதும் உங்க மனைவிதான். இத்தனை வருஷமா உங்களைப் பிரிஞ்சிருந்து, தன்னோட சின்னச் சின்ன ஆசைகளைக் கூட அடக்கி வெச்சுக்கிட்டு, யாரோடையும் தன்னோட அந்தரங்க எண்ணங்களை பகிர்ந்துக்க முடியாம, பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி....நெனைச்சுப் பாருங்க சார்....அவங்களை இப்படி ஒரேயடியா உதறிட்டுப் போறது ரொம்ப தப்பு சார்”
“ஹலோ....எது தப்பு எது ரைட்டுன்னு எனக்குத் தெரியும். நல்ல பொஷிசனுக்கு வந்ததுக்கப்புறம் என்கூடவே வந்துடுங்க மஸ்கட்லயே இருக்கலாம்ன்னு நான் கூப்டப்ப அவ என்ன சொன்னா தெரியுமா....புள்ளைங்களோட படிப்பு இருக்கு, எங்க அப்பா அம்மாவை பாத்துக்க யாருமில்ல நாந்தான் பாத்துக்கனும், உங்க அப்பா வேற நம்மக் கூட இருக்கார், அவர யார் பாத்துக்குவாங்கன்னு கதை சொல்லி வரலன்னு சொல்லிட்டா...”
“நியாயம்தான சார்...பசங்க படிப்புக் கூட ஓக்கே...ஆனா வயசான உங்க அப்பாவப் பாத்துக்கனுன்னு சொன்னது சரிதான சார். அதுவுமில்லாம, அவங்க அப்பா அம்மாவையும் பாத்துக்கிற கடமையும் அவங்களுக்கு இருக்கில்ல...”
“அதுக்குன்னு...எனக்கும் குடும்பத்தோட இருக்கனுன்னு ஆசை இருக்காதா..?”
“சார்...அதுக்கு நீங்க அந்த வேலையை விட்டுட்டு இந்தியாவுக்கே வந்திருக்கனும்...கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னா எப்படி சார்? பொருளாதாரத்தை உயர்த்திக்கறதுக்காக வெளிநாட்டுல வேலை செய்யறது தப்பில்ல....ஆனா ஒரு அளவுக்கு உயர்ந்ததுக்கப்புறமும்...தொடர்ந்து அங்கேயே இருந்து எதுக்கு சார் வாழ்க்கையைத் தொலைக்கனும்?”
“நீங்க ஈஸியா சொல்லிட்டீங்க...நான் ஆரம்பத்துல எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன், எவ்ளோ அவமானங்கள சந்திச்சிருப்பேன்னு உங்களுக்குத் தெரியுமா...இன்னைக்கு அத்தனைபேரும் என்னை மதிக்கிறானுங்கன்னா அதுக்குக் காரணம் இந்தப் பணமும், வசதியும்தான...இத்தனை வருஷம் வெளிநாட்டுல இருந்ததாலத்தான இதை அடைய முடிஞ்சுது?”
“ஒத்துக்கறேன் சார். ஆனா இப்ப நீங்க செய்யப்போற காரியத்தோட பின் விளைவுகளை யோசிச்சீங்களா...உங்களப் பொறுத்தவரைக்கும் நீங்க உங்க சொந்த விருப்பு வெறுப்புன்னு ரொம்ப சுயநலமா யோசிக்கிறீங்க. குடும்ப வாழ்க்கைங்கறது ஒரு கமிட்மெண்ட் சார். டக்குன்னு உதறித் தள்ளிட்டுப் போயிட முடியாது. புத்தரா மாறின சித்தார்த்தன் செஞ்சதும் தப்புதான். அவரோட மனைவி என்ன பாவம் பண்ணாங்க? அப்பா இருந்தும் இல்லாதவங்களா உங்க பிள்ளைங்களும், புருஷன் இருந்தும் இல்லாத விதவையா உங்க மனைவியும் வாழனுமா சார்? அடிபட்டவன் சொல்றேன் சார். சின்ன வயசுல எங்களை விட்டுட்டு எங்கப்பா ஓடிட்டாரு...அதுக்கப்புறம் என்னையும், என் தம்பி தங்கைகளையும் வளர்த்து ஆளாக்க எங்கம்மா எவ்ளோ கஷ்டப்பட்டாங்க தெரியுமா சார்..?”
“அந்த மாதிரி என் குடும்பம் கஷ்டப்பட தேவையில்ல....அதான் எல்லா வசதியும் இருக்கே....ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு புத்தர் சொன்னாரு...ஆனா அத்தனைக்கும் ஆசைப்படுன்னு இன்னொருத்தர் சொல்றாரு..ஆசையே அழிவுக்குக் காரணம்ன்னு சொன்ன புத்தரை வணங்குற பக்கத்து நாட்டுக்காரங்க அழிக்கறதையே ஆசையா வெச்சுருக்காங்க...ஸோ...அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயங்கள். மன்னிச்சுடுங்க புகழேந்தி...இது எல்லாத்தையும் விட்டு விடுதலையாகி...சந்தோஷமான வாழ்க்கையை வாழறதுன்னு நான் தீர்மானிச்சுட்டேன்...இனி யாராலயும் அதை மாத்த முடியாது...குட்நைட்...”
பட்டென்று சொல்லிவிட்டு போர்வையை முழுக்க தலையோடுப் போர்த்திக்கொண்டு விட்டார்.
யாராலையும் மாத்தமுடியாதுன்னு ஈஸியா சொல்லிட்டாரு....ஆனா காலம் எல்லாத்தையும் மாத்தும்ன்னு அவருக்குப் புரியும்...என நினைத்துக்கொண்டே...நிகழ்ந்த உரையாடல்களின் தாக்கத்தில் தூக்கம் பிடிக்காமல் விழித்துக்கொண்டிருந்தான் புகழேந்தி.
புகழேந்தி நினைத்ததைப்போலவே காலம் அவரது முடிவை மாற்றித்தான் விட்டது. சியோலில் இருந்தபோது குடி அளவுக்கு மீறியதால் அவரது சிறுநீரகம் செயலிழந்ததும், அவரது நிறுவனத்தாரால் அவர் சொந்த நாட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டதும், கையில் காசு இல்லாமல் அனைத்தையும் காண்ட்ராக்ட் பெண்ணிடம் இழந்து, அவர் தன் சொந்த வீட்டுக்கு வந்ததும், மனைவியின் சிறுநீரக தானத்தால்..மிச்சமிருக்கிற வாழ்க்கையை வாழ்ந்து வருவதும்...இதையெல்லாவற்றையும்விட...அவரது இந்த இமாலயத் தவறைப் பற்றித் தப்பித்தவறிக்கூட குறிப்பிட்டுவிடாமல் அவரது மனைவி அவருக்கு ஆதரவாய் இருந்ததைப் பார்த்து...அந்த பிலிப்பினோ எவ்வளவு பாவம் செய்தவன்...தான் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவன் என்பதை பாஸ்கரன் உணர்ந்துகொண்டதையும் என்றாவது ஒருநாள் நிகழப்போகும் எதேச்சையான சந்திப்பில் புகழேந்தியும் தெரிந்துகொள்வான்.