PDA

View Full Version : பட்டாம் பூச்சிப் பகற்கனவு



நாகரா
07-05-2012, 01:27 PM
சிமெண்டுத் தரையில்
திசையறியாது திணரும்
கம்பளிப் புழுவை
மிதிபட்டு நசியும் முன்
அவசரமாய் மெலிந்த காகிதம் மேல் ஏறச் செய்து
பின் புறச் சிறு தோட்டத்து மண்ணில்
அன்பின் மிகுதியொடு இட்டேன்

பட்டாம் பூச்சிப் பகற்கனவைப்
பலிக்க வைக்குமா அன்பு

"அன்பினால்(தேவனால்) கூடாத காரியம் ஏதும் இல்லை"
வேதாகம வசனம்
நேசாதார வனத்தில்
ஞானாகாச உறுதி அளித்தது