சொ.ஞானசம்பந்தன்
07-05-2012, 07:08 AM
கிரேக்கத் தொன்மத்தில் இடம் பெற்றுள்ள ஏந்த்திகெனி என்ற பெண்ணின் கதையைக்
கூறுகிறது சொஃபுக்ளீசின் ஒரு நாடகம் .
அதன் கதைச்சுருக்கம் :
தீப்ஸ் நகர மன்னன் ஈடிப்பஸ் இறந்த பின்பு , அவனுடைய புதல்வர்கள் எட்டியக்ளசும்
பொலிநைசிசும் சுழற்சி முறையில் அரசாள ஒப்புகின்றார்கள் . அரியணை ஏறிய மூத்தவன் எட்டியக்ளஸ் உரிய காலம் வந்தபோது
பதவியைத் துறக்க மறுத்துவிட்டான் . பொலிநைசிஸ் வேற்று நாடு சென்று படை
திரட்டிவந்து போரிட்டான் ; இப் படை தோற்றது ; சகோதரர் இருவருமே இறந்தனர் . பட்டத்துக்கு வந்த
அவர்களின் தாய்மாமன் கிரியன் , சொந்த நாட்டைத் தாக்கிய பொலிநைசிசைத் தேசத் துரோகி என அறிவித்து அவனுக்கு யாரும்
ஈமச் சடங்கு செய்யக்கூடாது என்று கட்டளை இட்டான் .
( பழைய கிரேக்கர்களுக்கு ஈமச் சடங்கு இன்றியமையாதது . அது நடக்காவிட்டால் இறந்தவர்க்குப் பேரிழிவு . அடக்கம் செய்யத் தடை விதித்தல் கடும் தண்டனைகளுள் ஒன்று )
ஈடிப்பசின் மகள் ஏந்த்திகெனி , மன்னனின் ஆணையை மீறி , தன் சகோதரனை அடக்கம் செய்தாள் .
அவளைக் கைது செய்த வேந்தன் , தரைக்கடியில் கல்லால் அறை கட்டி , அதனுள் அவளை உயிருடன் தள்ளி மூடிவிடத் தீர்ப்பளித்தான் ; தீர்ப்பு நிறைவேறிற்று. .
அவளுக்கு மணாளனாக உறுதி செய்யப்பட்டிருந்த ஹெமோன் ( அரசனின் மகன் ) தற்கொலை செய்துகொண்டான் .
( இக் கதையின் முடிவு, அனார்கலி - சலீம் கதையை நினைவூட்டுகிறது அல்லவா ?)
நாடகத்தின் சில காட்சிகளைப் பிரெஞ்சு மூலத்திலிருந்து பெயர்த்து , மன்றத்தில் பதிவேன்
கூறுகிறது சொஃபுக்ளீசின் ஒரு நாடகம் .
அதன் கதைச்சுருக்கம் :
தீப்ஸ் நகர மன்னன் ஈடிப்பஸ் இறந்த பின்பு , அவனுடைய புதல்வர்கள் எட்டியக்ளசும்
பொலிநைசிசும் சுழற்சி முறையில் அரசாள ஒப்புகின்றார்கள் . அரியணை ஏறிய மூத்தவன் எட்டியக்ளஸ் உரிய காலம் வந்தபோது
பதவியைத் துறக்க மறுத்துவிட்டான் . பொலிநைசிஸ் வேற்று நாடு சென்று படை
திரட்டிவந்து போரிட்டான் ; இப் படை தோற்றது ; சகோதரர் இருவருமே இறந்தனர் . பட்டத்துக்கு வந்த
அவர்களின் தாய்மாமன் கிரியன் , சொந்த நாட்டைத் தாக்கிய பொலிநைசிசைத் தேசத் துரோகி என அறிவித்து அவனுக்கு யாரும்
ஈமச் சடங்கு செய்யக்கூடாது என்று கட்டளை இட்டான் .
( பழைய கிரேக்கர்களுக்கு ஈமச் சடங்கு இன்றியமையாதது . அது நடக்காவிட்டால் இறந்தவர்க்குப் பேரிழிவு . அடக்கம் செய்யத் தடை விதித்தல் கடும் தண்டனைகளுள் ஒன்று )
ஈடிப்பசின் மகள் ஏந்த்திகெனி , மன்னனின் ஆணையை மீறி , தன் சகோதரனை அடக்கம் செய்தாள் .
அவளைக் கைது செய்த வேந்தன் , தரைக்கடியில் கல்லால் அறை கட்டி , அதனுள் அவளை உயிருடன் தள்ளி மூடிவிடத் தீர்ப்பளித்தான் ; தீர்ப்பு நிறைவேறிற்று. .
அவளுக்கு மணாளனாக உறுதி செய்யப்பட்டிருந்த ஹெமோன் ( அரசனின் மகன் ) தற்கொலை செய்துகொண்டான் .
( இக் கதையின் முடிவு, அனார்கலி - சலீம் கதையை நினைவூட்டுகிறது அல்லவா ?)
நாடகத்தின் சில காட்சிகளைப் பிரெஞ்சு மூலத்திலிருந்து பெயர்த்து , மன்றத்தில் பதிவேன்