M.Jagadeesan
07-05-2012, 03:37 AM
பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி காலில் இருந்த சிலம்பில், முத்துப் பரல்களும், வணிகனாகிய கோவலனின் மனைவி கண்ணகியின் காற் சிலம்பில், மாணிக்கப் பரல்களும் இருந்ததென்று சிலப்பதிகாரம் கூறுகிறது. அப்படியானால் கோவலனைவிட பாண்டியன், செல்வச் செழிப்பில் குறைந்தவனா?
அந்தக் காலத்தில் தமிழகத்தில், மாணிக்கமும் , வைரமும் இறக்குமதி பொருட்கள்; அவை அந்நிய நாட்டிலிருந்து வருபவை.அதைக் கோவலனின் மனைவி , விலைகொடுத்து வாங்கி அணியலாம்;ஆனால் நாட்டுப் பற்று கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன், தன் நாட்டில் கிடைத்த முத்துக்களையே தன் மனைவியின் சிலம்பில் வைத்தான். நாடாளும் மன்னவன் , சுதேசிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இளங்கோ அடிகள் அவ்வாறு காட்டியுள்ளார்.
நன்றி: ம.பொ. சி. அவர்களின் சொற்பொழிவுகள்- தினமலர் வாரமலர்.
அந்தக் காலத்தில் தமிழகத்தில், மாணிக்கமும் , வைரமும் இறக்குமதி பொருட்கள்; அவை அந்நிய நாட்டிலிருந்து வருபவை.அதைக் கோவலனின் மனைவி , விலைகொடுத்து வாங்கி அணியலாம்;ஆனால் நாட்டுப் பற்று கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியன், தன் நாட்டில் கிடைத்த முத்துக்களையே தன் மனைவியின் சிலம்பில் வைத்தான். நாடாளும் மன்னவன் , சுதேசிப் பொருட்களையே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இளங்கோ அடிகள் அவ்வாறு காட்டியுள்ளார்.
நன்றி: ம.பொ. சி. அவர்களின் சொற்பொழிவுகள்- தினமலர் வாரமலர்.