PDA

View Full Version : நாக்கு..! நாக்கு ..!!



vasikaran.g
05-05-2012, 10:45 AM
நீருக்குள் ஜலசமாதி !
நினைத்த உடனே ,
வெளியில் வரும்
உடலின் பாதி !!
எலும்பிலா ஜாதி !!!
எளிதில் உணர்ச்சி
வயப்படும் வியாதி !!!!

வாயில் வசிக்கும் ,
உமிழ் நீரில் இருக்கும் ,
பிறர் உணர்வை
பல சமயம் சிதைக்கும் !
சொல்லம்பு தொடுக்கும்
ஐம்புலன்களில் ஒன்று !!

பற்கள் காவலிருக்க - சுவை
முட்கள் மேலிருக்க ,
சொற்களை அள்ளிதெளிக்கும்,
உணவை அரைக்க உதவிநிற்கும்
திணவு முதலை !

பற்களுக்கு வெளியே வந்து
கொட்டும் குளவி !
இதை எப்படி கட்டுபடுத்துவது?
இதுதான் மனிதனின் கவலை !
கட்டுப்பாட்டில் வைத்திருந்தால்
இது கனவிலும் கவிதை !!

தடுப்பணை தகர்ந்தால் - இது
உணர்வுள்ள விதவை !
ஊழிசெய்ய காத்திருக்கும்
உயருள்ள மிதவை !!

காவலிருக்கும் பற்களை
கடைக்கண்ணால் ஏமாற்றிவிட்டு ,
இரத்தமின்றி சத்தமின்றி
காயப்படுத்தும் வித்தை கொண்ட
உடலின் உணர்வு அணிகலன் !

இயற்க்கை தந்த சாதனம் !
இனிய தமிழ் பேசிடும் !!
உறைக்குள்ளே புகலிடம் !!!
உண்மையில் இருட்டறையில்
என்றும் உறைவிடம் !

கண்ணிலும் நீர், நாவிலும் நீர்
இரண்டுமே சக்தி வாய்ந்தது !
கண்ணைவிட்டு நீர் வெளியே
நீரை விட்டு நா வெளியே !!
விளைவு ! விபத்துதான் !!!

கண்ணீர் உவர்ப்புத்தான் !
உமிழ் நீர் செரிப்புக்குத்தான் !!
தவறாக பயன்படுத்தும் போது
இரு நீராலும் எஞ்சுவது
மனிதனுக்கு தவிப்புத்தான் !!!

ஜானகி
05-05-2012, 02:17 PM
நாக்கே இல்லாமல் வந்த

[ கணிணியின்]

வாக்குமூலம்....ம்ம்ம்...

படு ஷோக்குதான்...!

jayanth
05-05-2012, 04:36 PM
நாக்குக் கவிதை நன்று வசிகரன்...!!!

vasikaran.g
07-05-2012, 03:35 AM
நாக்கே இல்லாமல் வந்த

[ கணிணியின்]

வாக்குமூலம்....ம்ம்ம்...

படு ஷோக்குதான்...!

நன்றி ஜெயந்த் ..

vasikaran.g
07-05-2012, 03:36 AM
ரொம்ப நன்றி ஜானகி ..

கீதம்
09-05-2012, 03:25 AM
நாவின் மகிமையையும் நாவாலுண்டாகும் விபரீதத்தையும் விவரிக்கும் வரிகளில் தெறிக்கிறது யதார்த்தம். பாராட்டுகள் வசீகரன்.

நாகரா
10-05-2012, 03:17 AM
நா பற்றிய பா
ஆஹா அருமை
வாழ்த்துக்கள் வசீகரன்

vasikaran.g
11-05-2012, 03:35 AM
நாவின் மகிமையையும் நாவாலுண்டாகும் விபரீதத்தையும் விவரிக்கும் வரிகளில் தெறிக்கிறது யதார்த்தம். பாராட்டுகள் வசீகரன்.

நன்றிகள் கீதம் ..

vasikaran.g
11-05-2012, 03:37 AM
நா பற்றிய பா
ஆஹா அருமை
வாழ்த்துக்கள் வசீகரன்

வாழ்த்து பா சொல்லும்
உங்கள் கருத்து பா
நன்றி என் நாவில் இருந்து
தானாகவே வருதுப்பா..

நன்றி நாகரா