rambal
07-04-2003, 05:24 PM
ஒரு ப(ஞ்சதந்திர)ட்டக் கதை
அரையாடை உடுத்திய
கிழவன்
பேரக் குழந்தைகளுக்கு
பட்டம் செய்ய
காகிதம் வாங்கினான்..
வாங்கிய
காகிதத்தை
கிழவன் பேச்சைக் கேளாத
கிழவனின் குரங்குகள்
ஆளாளுக்கு பங்கு போட்டு
கத்தரித்து
அவரவரிஷ்டம் போல்
வண்ணம் பூசியது..
இப்பொழுது பட்டம் தயாராக
பறப்பதற்கு...
கிழவன் பேச்சைக் கேளா
குரங்குகள்
அதனதன் கொள்கை நூலை
எடுத்து பட்டத்தை பறக்க விட்டன..
கிழவன் வாங்கிவந்த
கொள்கை நூலை
வைத்து வியாபாரம் பண்ணிய வியாபாரி
நட்டமடைந்தான் பிறிதொரு நாளில்..
இதைக் கண்டு வேதனை தாங்கா
கிழவனும்
பட்டம் பறப்பதை காணச் சகியாமல்
'ஹே ராம்' என்றே உயிர்
துடித்து செத்தான்..
பறப்பது தங்களுக்கு
வாங்கிவந்த பட்டமென்று
தெரியாமல்
வேடிக்கை பார்த்தது
ஒரு கூட்டம்..
இதைத் தெரிந்து கொண்ட
குரங்குகள்
அடித்த கொட்டம் இருக்கிறதே..
அப்பப்பா..
பிறிதொரு நாளில்
அந்தப் பட்டம் தங்களுடையது
என்று அறிந்த கூட்டம்
ஒன்றும் செய்ய இயலாமல்
வேடிக்கையிஅத் தொடர்ந்தது..
பட்டம் முள்ளில் சிக்கி
கசங்கி கிழிந்ததும்
புதிய பட்டம்
புதிய கொள்கை நூல்..
பட்டம் பறக்கிறது
கன ஜோராக...
இப்பொழுது ஒரு
சிறு மாற்றம்..
வேடிக்கை பார்க்கும் கூட்டமே
காகிதம் வாங்கிக் கொடுக்கிறது..
கொள்கை நூல்
நைந்து போனது பற்றியெல்லாம்
கவலையேபடாமல்...
இப்படித்தான்
குரங்குகள்
பட்டம் விட..
ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க..
முதன் முதலில்
காகிதம் வாங்கிக் கொடுத்த
கிழவன்...
அவனைத்தான் மறந்து போயாச்சே..
அவன் கொள்கை நூல்..
அதுவும் நைந்து
பல துண்டாகிப் போய்விட்டது...
அப்படி என்றால் காகிதம்..
பணம் உள்ளவர்களுக்கும்
குரங்குகளுக்கும் மட்டுமே...
அப்படி என்றால் பேரக்குழந்தைகள்...
அவர்கள்
கோகோ கோலாவும் காபி பப்களிலும்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்...
அரையாடை உடுத்திய
கிழவன்
பேரக் குழந்தைகளுக்கு
பட்டம் செய்ய
காகிதம் வாங்கினான்..
வாங்கிய
காகிதத்தை
கிழவன் பேச்சைக் கேளாத
கிழவனின் குரங்குகள்
ஆளாளுக்கு பங்கு போட்டு
கத்தரித்து
அவரவரிஷ்டம் போல்
வண்ணம் பூசியது..
இப்பொழுது பட்டம் தயாராக
பறப்பதற்கு...
கிழவன் பேச்சைக் கேளா
குரங்குகள்
அதனதன் கொள்கை நூலை
எடுத்து பட்டத்தை பறக்க விட்டன..
கிழவன் வாங்கிவந்த
கொள்கை நூலை
வைத்து வியாபாரம் பண்ணிய வியாபாரி
நட்டமடைந்தான் பிறிதொரு நாளில்..
இதைக் கண்டு வேதனை தாங்கா
கிழவனும்
பட்டம் பறப்பதை காணச் சகியாமல்
'ஹே ராம்' என்றே உயிர்
துடித்து செத்தான்..
பறப்பது தங்களுக்கு
வாங்கிவந்த பட்டமென்று
தெரியாமல்
வேடிக்கை பார்த்தது
ஒரு கூட்டம்..
இதைத் தெரிந்து கொண்ட
குரங்குகள்
அடித்த கொட்டம் இருக்கிறதே..
அப்பப்பா..
பிறிதொரு நாளில்
அந்தப் பட்டம் தங்களுடையது
என்று அறிந்த கூட்டம்
ஒன்றும் செய்ய இயலாமல்
வேடிக்கையிஅத் தொடர்ந்தது..
பட்டம் முள்ளில் சிக்கி
கசங்கி கிழிந்ததும்
புதிய பட்டம்
புதிய கொள்கை நூல்..
பட்டம் பறக்கிறது
கன ஜோராக...
இப்பொழுது ஒரு
சிறு மாற்றம்..
வேடிக்கை பார்க்கும் கூட்டமே
காகிதம் வாங்கிக் கொடுக்கிறது..
கொள்கை நூல்
நைந்து போனது பற்றியெல்லாம்
கவலையேபடாமல்...
இப்படித்தான்
குரங்குகள்
பட்டம் விட..
ஒரு கூட்டம்
வேடிக்கை பார்க்க..
முதன் முதலில்
காகிதம் வாங்கிக் கொடுத்த
கிழவன்...
அவனைத்தான் மறந்து போயாச்சே..
அவன் கொள்கை நூல்..
அதுவும் நைந்து
பல துண்டாகிப் போய்விட்டது...
அப்படி என்றால் காகிதம்..
பணம் உள்ளவர்களுக்கும்
குரங்குகளுக்கும் மட்டுமே...
அப்படி என்றால் பேரக்குழந்தைகள்...
அவர்கள்
கோகோ கோலாவும் காபி பப்களிலும்
எதைப் பற்றியும் கவலைப்படாமல்...