PDA

View Full Version : யாழ் மேதின ஊர்வலத்தில் பறந்த புலிக்கொடி



rajkulan
02-05-2012, 08:16 AM
யாழில் இன்று நடைபெற்ற மேதின ஊர்வலத்தில் சில இளைஞர்கள் தமிழீழத் தேசியக் கொடியை விரித்துக்காட்டி ஓடியுள்ளமை யாழ் குடாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு, இன்னுமொருவர் தமிழீழ படம் பொறிக்கப்பட்டுள்ள உள்சட்டையை அணிந்து அதன்மேல் வேறொரு சட்டையை அணிந்து ஊர்வலத்தில் கலந்துகொண்டதோடு, குறிப்பிட்ட நேரத்தின் பின் தனது மேற்சட்டையை கழட்டி தமிழீழத்தைக் காட்டியவாறு ஓடியுள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக சில ஊடகங்கள் பிரிதொரு செய்தியையும் வெளியிட்டுள்ளன.எதிர்க்கட்சிகள் கூட்டாக நடத்திய மே தின ஊர்வலத்தை குழப்புவதற்காகவே சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் இவ்வாறு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


http://www.youtube.com/watch?v=5Su_Aw37VNg&feature=player_embedded

நன்றி,
ஈழதேசம்.