PDA

View Full Version : மௌனத்தையும் ரசிகின்றதே...



reena
30-04-2012, 03:51 PM
அழகாய் ஒரு வார்த்தை...
ஆவலாய் எதிர்பார்த்து ..
ஆசையாய் காத்திருந்தேன்..

மௌனத்தையே பதிலளித்தாய் ...
ஏக்கத்துடன் மெளனமானேன்...

அன்பே..
உன் மௌனத்தை உணர்ந்தேன்...
அதன் அர்த்தத்தை புரிந்தேன்...

உயிரே...
உன் மௌனம் கூட ..
அழகானதே...
உன்னை ரசித்த என் மனது..
உன் மௌனத்தையும் ரசிகின்றதே..

அக்னி
01-05-2012, 03:30 PM
ஒரு வார்த்தை என்ன..,
ஓராயிரம் வார்த்தைகள்,
ஒரு கோடி வார்த்தைகள்...
திருப்தி கொள்ளாது காதல் மனது.
அடங்கிக் கொள்ளாது ஆசை மனது.

ஏதோவொரு வரையறுக்கப்பட்ட
எண்ணிக்கைதானே வரும் வார்த்தைகள்...

மௌனம் அப்படியா...
முடிவிலியாய்
தொடர்ந்து தொடந்து
மனதும் மனதும்
பேசிக்கொள்ளுமே...

மௌனத்தை உணரத்
தேவை மௌனம்...
மௌனத்தை உணர்ந்தால்
போதும் மௌனம்...

அழகாய்ச் சொல்லும் அழகான கவிதை...
பாராட்டுக்கள் பல...

reena
02-05-2012, 04:07 PM
அழகான பாராட்டுக்கு ..அன்பான நன்றிகள்...

பாலகன்
02-05-2012, 04:40 PM
இப்படி நீங்களே முடிவுக்கு வந்துட்டா எப்படி? (தமாசு)
கவிதை மிக மிக அருமை... அவள் மெளனத்தில் கூட திருப்தியடையும் உங்கள் அன்பு அசர வைக்கிறது. பாராட்டுகள்