சொ.ஞானசம்பந்தன்
28-04-2012, 06:21 AM
-------------------------------------------------------------
( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை
அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் , தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார் .)
க்ளித்தெம்நேஸ்த்ரா --
அன்றுமுதல்
அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்
தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி
சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.
இங்கே யதனால் இரவும் பகலும்
கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்
மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி .
விடுதலை என்றனுக்கு இப்போது ; விடுதலை
அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து .
என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,
என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்
பாம்பாம் இவளிடம் இருந்து மேதான் .
இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று .
இனிநான் வாழலாம் அமைதியாய்.
எலெக்த்ரா - நீதி யாகுமா இது ?
க்ளி -நீதி , வழங்கி யாயிற்று அவனுக்கு .
இன்னம் இல்லை உனக்கு .
எலெக் - பழிக்கான தேவதையே ! கேள்.
பேசு மடிந்தவனுக்காக .
க்ளி --அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது ;
நன்றாயும் பேசிவிட்டது .
( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை
அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர் , தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார் .)
க்ளித்தெம்நேஸ்த்ரா --
அன்றுமுதல்
அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்
தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி
சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.
இங்கே யதனால் இரவும் பகலும்
கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்
மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி .
விடுதலை என்றனுக்கு இப்போது ; விடுதலை
அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து .
என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,
என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்
பாம்பாம் இவளிடம் இருந்து மேதான் .
இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று .
இனிநான் வாழலாம் அமைதியாய்.
எலெக்த்ரா - நீதி யாகுமா இது ?
க்ளி -நீதி , வழங்கி யாயிற்று அவனுக்கு .
இன்னம் இல்லை உனக்கு .
எலெக் - பழிக்கான தேவதையே ! கேள்.
பேசு மடிந்தவனுக்காக .
க்ளி --அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது ;
நன்றாயும் பேசிவிட்டது .