View Full Version : வியந்தே போகிறேன்.
reena
25-04-2012, 06:58 AM
ஆறுதலான வார்த்தைகளே
அரவணைக்கும் கரங்களாய் ...
என் விழி கலங்க ..
பொறுக்காத இளகிய...
உன் நெஞ்சம்...
என் மனம் என்னும்...
பாலைவனத்தில் ....
பனிதேசமாய்....
உன் நேசம்....
அசந்து போகிறேன்...
உன் நேசத்தை ...
உணர்ந்து...
வெற்றிடமாய் இருந்த ...
என் மனம்...
காதலின் ...
ஒளி பட்டதும்...
தியான மண்டபமாய்...
ஆனதே ...
வியந்தே போகிறேன்...
நம் காதலை...
நினைத்து...!!!!
//என் மனம் என்னும்...
பாலைவனத்தில் ....
பனிதேசமாய்....
உன் நேசம்....
வெற்றிடமாய் இருந்த ...
என் மனம்...
காதலின் ...
ஒளி பட்டதும்...
தியான மண்டபமாய்...
ஆனதே ...
//
மிக ரசித்த வரிகள் இவை
மனது தியான மண்டபமாய் மாறிவிட்டதானால், அது எவ்வளவு நிம்மதி அடைந்திருக்க வேண்டும். தியான மண்டம் என்பது மிக நிசப்தமாக இருக்கும், மனதும் அவ்வளவு நிசப்தமாக, நிச்சலனமாக இருக்கிறதானால், அவன் எவ்வளவு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்க வேண்டும், அந்த நம்பிக்கை மிக சாதாரணமானது அல்ல, அவன் காதல் அத்தனை தூய்மையானதும், ஆழமானதும், வலிமையானதுமாய் இருந்தால்தான் சாத்தியம், இல்லையென்றால் இப்படி ஒரு நம்பிக்கை, அதனால் வந்த அமைதி சாத்தியமில்லை
வாழ்த்துக்கள் சகோதரி
கீதம்
02-05-2012, 02:40 AM
ரசிக்க வைக்கும், ருசிக்க வைக்கும், சிரிக்க வைக்கும்,
புன்னகைக்க வைக்கும், பூரிக்க வைக்கும், புளகாங்கிதமடைய வைக்கும்,
பெருமை கொள்ளவைக்கும், பெருமிதமுண்டாக்கும், பிதற்றவைக்கும்
இன்னும் என்னவெல்லாமோ செய்யவைக்கும் காதல்,
இங்கே அசந்துபோக வைக்கிறது, வியந்து போக வைக்கிறது,
தன்னைத்தானே தன்னில்தானே!
அவ்விந்தைக் காதல் கண்டு சிந்தை வியந்து பாராட்டுகிறேன்.
பாராட்டுகள் ரீனா.
aasaiajiith
05-05-2012, 10:32 AM
உங்களோடு இணைந்து
நானும் வியந்துபோகிறேன் !
வாழ்த்துக்கள் !
reena
21-05-2012, 12:52 PM
வாழ்த்துகளுக்கும்...பாராட்டுகளுக்கும் ..
நன்றிகள் ஆயிரம்...
vasikaran.g
26-05-2012, 12:23 PM
வியந்தே போகிறேன் ..
காவிரியில் வெள்ளம் ..
கரைகள் எங்கும்
மகிழ்ச்சி பொங்கல் ..
jayanth
26-05-2012, 01:25 PM
நீங்கள் மட்டுமா வியந்தீர்கள்...!!!
சிவா.ஜி
26-05-2012, 02:02 PM
வியக்க வைத்த காதல்...அதை விளைவித்த புரிதல்.
வாழ்த்துக்கள் சகோதரி.
மஞ்சுபாஷிணி
26-05-2012, 02:05 PM
காதல் செய்யும் அற்புதத்தை வரிகளாக படைத்த விதம் மிக அழகு ரீனா.. அன்பு வாழ்த்துகள்....