ravikrishnan
18-04-2012, 04:32 PM
http://m.ak.fbcdn.net/a3.sphotos.ak/hphotos-ak-snc7/p480x480/395579_243864472358440_183649545046600_549404_505880831_n.jpg
இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்
நான்குமாத்திற்குமுன் தானே புயல் கடலூர் மாவட்டத்தை நிர்முலமாக்கியிருக்கிறதே, அதுபோல தியாகச்சுடர் காமராசர் ஆட்சி காலத்திலும் தமிழ்நாட்டில் புயல் வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்து போன ராமநாதபுரத்தில் நிவாரண பணிகளை பார்வையிட முதல்வர் காமராசர் ராமநாதபுரத்தின் பிரதான சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். சாலையின் இருபுறமும் எங்கும் வெள்ளக் காடுகளாக இருக்கும் காட்சியை காமராசர் பார்த்துக்கொண்டே வருகிறார். அப்போது பிரதான சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சிறு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை காண்கிறார் காமராசர். அந்த கிராமத்தை பற்றி விசாரித்து, என்னென்ன மீட்பு பணிகளை செய்திருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் கேட்கும் போது, அதிகாரிகளிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. உடனே காரை நிறுத்தி, வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார். அதிகாரிகள் காமராசர் பின்னால் ஓடுகிறார்கள். அது ஒரு சின்ன கிராமம், அந்த கிராமத்தின் மக்கள் மேடான பகுதிகளில் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்வர் காமராசர் அவர்களை கண்டதும் அந்த கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். காமராசருக்கு அதற்கு பிறகுதான் தெரிகிறது, அங்கே அதிகாரிகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவே இல்லை. அதிகாரிகளை கடிந்து கொண்ட காமராசர், உடனே அந்த கிராம மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் போன்றவற்றை வரவழைத்து, அங்கேயே சமைத்து அந்த கிராம மக்களோடு சேர்ந்து ஒரு வேளை உணவருந்தி விட்டு, எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி அந்த கிராமத்தை கடந்து சென்றார் பெருந்தலைவர் காமராசர். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அன்பர்களே!!:redface:
இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்
நான்குமாத்திற்குமுன் தானே புயல் கடலூர் மாவட்டத்தை நிர்முலமாக்கியிருக்கிறதே, அதுபோல தியாகச்சுடர் காமராசர் ஆட்சி காலத்திலும் தமிழ்நாட்டில் புயல் வந்தது. ராமநாதபுரம் மாவட்டம் முற்றிலும் சிதைந்து போனது. சிதைந்து போன ராமநாதபுரத்தில் நிவாரண பணிகளை பார்வையிட முதல்வர் காமராசர் ராமநாதபுரத்தின் பிரதான சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார். சாலையின் இருபுறமும் எங்கும் வெள்ளக் காடுகளாக இருக்கும் காட்சியை காமராசர் பார்த்துக்கொண்டே வருகிறார். அப்போது பிரதான சாலையில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சிறு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை காண்கிறார் காமராசர். அந்த கிராமத்தை பற்றி விசாரித்து, என்னென்ன மீட்பு பணிகளை செய்திருக்கிறீர்கள் என்று அதிகாரிகளிடத்தில் கேட்கும் போது, அதிகாரிகளிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. உடனே காரை நிறுத்தி, வேட்டியை மடித்துக்கட்டி கொண்டு வெள்ளத்தில் நடக்க ஆரம்பித்து விட்டார். அதிகாரிகள் காமராசர் பின்னால் ஓடுகிறார்கள். அது ஒரு சின்ன கிராமம், அந்த கிராமத்தின் மக்கள் மேடான பகுதிகளில் உட்கார்ந்து இருக்கிறார்கள். முதல்வர் காமராசர் அவர்களை கண்டதும் அந்த கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர். காமராசருக்கு அதற்கு பிறகுதான் தெரிகிறது, அங்கே அதிகாரிகள் நிவாரணப்பணிகளை மேற்கொள்ளவே இல்லை. அதிகாரிகளை கடிந்து கொண்ட காமராசர், உடனே அந்த கிராம மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி, குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் போன்றவற்றை வரவழைத்து, அங்கேயே சமைத்து அந்த கிராம மக்களோடு சேர்ந்து ஒரு வேளை உணவருந்தி விட்டு, எல்லா உதவிகளையும் செய்வதாக கூறி அந்த கிராமத்தை கடந்து சென்றார் பெருந்தலைவர் காமராசர். இன்றைய ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் அன்பர்களே!!:redface: