lavanya
25-12-2003, 06:59 PM
புத்திசாலி வீர்சிங்
வீர்சிங்கும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு
கடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.
பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது. வீர்சிங்கின்
நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். வீர்சிங்கும்
சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் வீர்சிங்கின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தை
கிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"
என்றான். கொஞ்ச நேரம் யோசித்த வீர்சிங் சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்ச
நேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்ரே..? எனகேட்ட நண்பனுக்கு
வீர்சிங் பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு
வர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".
----------------------------------------------
வீர்சிங் எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி
குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க வீர்சிங் முடிவு
செய்தான்.ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.
அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்
"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல..."
"ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?"
"அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே..."
"பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..?"
"பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்.."
"அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?
"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்று
பெருமையாக சொன்னான் வீர்சிங்.
வீர்சிங்கும் அவன் நண்பரும் ஒரு நாள் மீன் பிடிக்க படகு ஒன்றை எடுத்துக்கொண்டு
கடலுக்குள் போனார்கள். முதலில் ஒரு இடத்தில் அவ்வளவாக மீன்கள் கிட்டவில்லை.
பிறகு நெடுந்தூரம் கடலுக்குள் போனார்கள். அங்கு நிறைய மீன் கிடைத்தது. வீர்சிங்கின்
நண்பன் சொன்னான் " நாளைக்கும் இதே இடத்துக்கு வருவோம்" என்றான். வீர்சிங்கும்
சந்தோஷமாக ஒத்து கொண்டான். ஆனால் வீர்சிங்கின் நண்பன் உடனே ஒரு சந்தேகத்தை
கிளப்பினான். "நாளைக்கு வர்ரதுக்கு எப்படிடா இந்த இடத்தை ஞாபகம் வச்சுக்கறது...?"
என்றான். கொஞ்ச நேரம் யோசித்த வீர்சிங் சடாரென கடலுக்குள் குதித்து மூழ்கி கொஞ்ச
நேரம் கழித்து மேலே வந்தான். "எங்கடா போயிட்டு வர்ரே..? எனகேட்ட நண்பனுக்கு
வீர்சிங் பெருமையாக சொன்னான். " படகுக்கு அடியில போய் அடையாள குறி போட்டுட்டு
வர்ரேன்..நாளைக்கு இதை வச்சி இந்த இடத்துக்கு வந்துடலாம்".
----------------------------------------------
வீர்சிங் எப்போதுமே எல்லாவற்றிலும் கவனக்குறைவாக இருப்பதாய் அவன் மனைவி
குறைபட்டுக் கொண்டாள். அதிலிருந்து கொஞ்சம் கவனமாக இருக்க வீர்சிங் முடிவு
செய்தான்.ஒரு நாள் பஸ்ஸில் வரும்போது நடத்துனரிடம் இரண்டு டிக்கெட்கள் எடுத்தான்.
அருகிலிருந்த அவனுக்கு தெரிந்த ஒருவர் 'ஏன் 2 டிக்கெட் எடுக்கறீங்க...? ' என்றார்
"ஒண்ணு மிஸ்ஸானாலும் ஒன்னை வச்சுக்கலாம்ல..."
"ரெண்டுமே மிஸ்ஸாயிடுச்சின்னா...?"
"அதுக்குதான் பணம் வச்சிருக்கேனே..."
"பணத்தை யாரும் எடுத்துட்டாங்கன்னா..?"
"பேண்ட் பாக்கெட்ல பர்ஸ் வச்சிருக்கேன்...அதிலேர்ந்து எடுத்துப்பேன்.."
"அதையும் யாரும் பிக்பாக்கெட் அடிச்சிட்டாங்கன்னா...?
"நான் என்ன முட்டாளா....?அதுக்காகத்தான் பஸ் பாஸ் எடுத்து வச்சிருக்கேன்..."என்று
பெருமையாக சொன்னான் வீர்சிங்.