PDA

View Full Version : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன் மரணம்



ஆதி
10-04-2012, 08:04 AM
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76.

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு சென்று விட்டு திரும்பிய வரதராஜனுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ள வரதராஜன், கடந்த 1977 மற்றும் 1980ம் ஆண்டுகளில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிட்டத்தட்ட 50 வருட அரசியல் வாழ்வில் இருந்த வரதராஜனுக்கு சொந்தமாக வீடு கூட கிடையாது. அவரது உடல் தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து மாலையில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

ஆதி
10-04-2012, 08:06 AM
மிக அதிர்ச்சியான செய்தி, நான் மதிக்கும் தலைவரில் இவர் முக்கியமானவர், இவரின் மன*சாந்திக்காக பிராத்திக்கிறேன்

nellai tamilan
10-04-2012, 08:19 AM
வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீழ்வதில்லை. அந்த லிஸ்ட் இவர் பெயரும் இருக்கிறது.. அவர் மறைந்தாலும் அவரின் புகழ் மறையாது

ஆதி
10-04-2012, 11:31 AM
வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டவர்கள் வீழ்வதில்லை. அந்த லிஸ்ட் இவர் பெயரும் இருக்கிறது.. அவர் மறைந்தாலும் அவரின் புகழ் மறையாது

உண்மைதான் நெல்லை தமிழன்

M.Jagadeesan
10-04-2012, 11:42 AM
ஒருவருக்குப் பல வீடுகள் இருக்கும் இக்காலத்தில், இவருக்கு ஒருவீடு கூட இல்லை என்ற செய்தி , அவரது மரணத்தைவிட அதிர்ச்சி தருவதாக உள்ளது.