reena
01-04-2012, 06:12 PM
அழகாய் ஒரு காதல் கடிதம்...
இதமாய் வடிக்க நினைத்தேன்...
என்னவனுக்காக ....
கடிதம் என்பதே.....
அரிதாய் போன காலத்தில்...
அன்பான வார்த்தைகள் இட்டு ...
ஆசையாய் வரிகள் புனைந்து ...
அருமையாய் ஒரு மடல்...
என் காதலனுக்காக...
என் காதல் சொல்லி ..
நேசத்தின் ஆழம் ..
எடுத்துரைத்து..
அடி மனதில் ..
ஒளிந்திருக்கும்...
சொத்தான நேசத்தை.
மொத்தமாய் சேர்த்து ...
முத்தாய் ஒரு கடிதம்..
நேசத்தை அறிந்து...
பாசத்தை உணர்ந்தது ...
உன் மனதிடம்....
என் மனதை..
மொத்தமாய் ....சுத்தமாய் ..
தொலைத்தேன் உன்னிடம்...
உன்மேல் கொண்ட காதலை..
தடுப்பனையிட்டு தடுத்தாலும்...
அணை உடைத்து* வெம்முகிறது...
உன்பால் நான் கொண்ட அன்பு...
தடை பல வந்தாலும்..
எதிர்த்து நிற்கும்...
பெரும் படையாய்...
நம் (என்)காதல்...
என் காதலை விளக்க ..
வார்த்தை தேடி தேடி...
சோர்வடைந்தேன் நான் ..
எழுத எழுத ...
வற்றாத ஜீவநதியாய்
உனக்கான நினைவுகள்... ..
*
என்றும் உனக்காக..
உன் அன்பிற்காக ...
துடிக்கும் ...
ஒரு ஜீவன்..
சிறு ஜீவன்..
இதமாய் வடிக்க நினைத்தேன்...
என்னவனுக்காக ....
கடிதம் என்பதே.....
அரிதாய் போன காலத்தில்...
அன்பான வார்த்தைகள் இட்டு ...
ஆசையாய் வரிகள் புனைந்து ...
அருமையாய் ஒரு மடல்...
என் காதலனுக்காக...
என் காதல் சொல்லி ..
நேசத்தின் ஆழம் ..
எடுத்துரைத்து..
அடி மனதில் ..
ஒளிந்திருக்கும்...
சொத்தான நேசத்தை.
மொத்தமாய் சேர்த்து ...
முத்தாய் ஒரு கடிதம்..
நேசத்தை அறிந்து...
பாசத்தை உணர்ந்தது ...
உன் மனதிடம்....
என் மனதை..
மொத்தமாய் ....சுத்தமாய் ..
தொலைத்தேன் உன்னிடம்...
உன்மேல் கொண்ட காதலை..
தடுப்பனையிட்டு தடுத்தாலும்...
அணை உடைத்து* வெம்முகிறது...
உன்பால் நான் கொண்ட அன்பு...
தடை பல வந்தாலும்..
எதிர்த்து நிற்கும்...
பெரும் படையாய்...
நம் (என்)காதல்...
என் காதலை விளக்க ..
வார்த்தை தேடி தேடி...
சோர்வடைந்தேன் நான் ..
எழுத எழுத ...
வற்றாத ஜீவநதியாய்
உனக்கான நினைவுகள்... ..
*
என்றும் உனக்காக..
உன் அன்பிற்காக ...
துடிக்கும் ...
ஒரு ஜீவன்..
சிறு ஜீவன்..