sivani
27-03-2012, 04:20 PM
வாழ்க்கையின் எல்லையா?
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !
வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !
வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!
-- தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம்! –
வாழவே இல்லையா?!
வசந்தமும் வந்திடாதோ - என்
வாழ்க்கையில் ! - இனி
வாழ்வதும் இறப்பதும்
விதி விட்ட வழியென
வேதனை ஒன்றையே
விழி காட்டுதோ !
வதைகளைத் தாங்கினேன்
வலைகளில் சிக்கினேன் !
விதைகளைப் போட்டிங்கு,
விரட்டுதே சதி என்னை !
விரயமாய் என் வாழ்க்கை
விரைந்தோடி விட்டதே !
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட - இனி
வேண்டுமோ இன்னும் நான் வாழ்ந்திட !
வாழ்க்கை என்னை மிரட்டினாலும்
வாசல் விட்டுத் துரத்தினாலும் !
வேதனைகள் மறைக்கிறேன் - என்றும்
வெறிகொண்டு உழைக்கிறேன்!
வெற்றி என்னும் பாதையில் - நான்
வெகுண்டெழுந்து நடக்கிறேன் !!
-- தமிழோடு வாழ்வோம்!
தமிழோடு உயர்வோம்! –