PDA

View Full Version : பணிவான வணக்கங்கள்



naankarthikeyan
27-03-2012, 11:18 AM
தமிழ் உலகை இணைக்கும் இந்த இணையதள பேருமக்களுக்கு நன்றிகள்!

இத்தளத்தில் "நான்" கார்த்திகேயன்.
"நான்" - இது ஆணவம் இல்லை.
என் அடையாளம்!

பல்லவர்களின் தலைநகர், கோயில்களின் நகரம், பட்டு நகரம், காஞ்சிபுரம் - எனக்கும், யான் அறிந்த என் முதாதையர்க்கும் பிறப்பிடம். சில காலம் சென்னை வாழ்வு; தாவர உயிர்நுட்பவியலின் முனைவர் (பட்டம்); தற்பொழுது ஜெர்மனியில் அறிவியலாளனாய் பயிற்சியும், பணியும் - தமிழகம் செல்லும் காலம் நோக்கி....

நான் தமிழ் வழியில் பயின்றவன் என்பதில், எனக்கு எப்பொழும் ஒரு கர்வம் உண்டு. என் அய்யா (தாத்தா) புலவர் சு. ஏகாம்பரம் அவர்கள், என் மனதில் வாழும் குரு.

எனக்கு துயரும் (உலகத் தமிழர் நிலை, இன்றைய தமிழின் நிலை), இன்பமும் (மாணிக்கவாசகர், பாரதி வரிகள்) தமிழ் தான்.

எனை பற்றி சில வரிகள்...
புவியின் சுழற்சியை மாற்ற முயலும்
புல் நுனி வாழ் பனித் துளி! நான்
செதுக்கப்படுவதை உணர்கிறேன்; சிற்பியும் தெரியவில்லை!
சிற்பமும் புரியவில்லை!!! காலத்தின்
பதிலை நோக்கி....

நண்பர் வட்டம், facebook அளவில் இருக்கும் என் கவிதைகள் இது முதல் இந்த சான்றோர் வலையில்.

நன்றி,
கார்த்திகேயன் சுப்பராயன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
27-03-2012, 11:25 AM
வாருங்கள் கார்த்திகேயன் அவர்களே. வருக, வருக என்று உங்களை வரவேற்கிறேன். உங்களின் வரவு நல்வரவு ஆகுக. உங்களின் கவிதைகளைக் காண ஆவல்.:)

பாரதி
27-03-2012, 02:49 PM
வணக்கம் நண்பரே.
வாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

சிவா.ஜி
27-03-2012, 04:33 PM
வாருங்கள் கார்த்திகேயன். அழகு தமிழில் அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

கீதம்
28-03-2012, 04:12 AM
அழகான அறிமுகத்தோடு மன்றம் வந்திருக்கும் தங்களை அன்போடு வரவேற்று மகிழ்கிறேன். என்றும் மன்றத்தோடு இணைந்திருங்கள்.

naankarthikeyan
29-03-2012, 03:17 PM
தமிழர்க்கே உரிய விருதோம்பல் கண்டு மிகவும் மகிழ்ச்சி. நன்றிகள் பல..

jayanth
30-03-2012, 09:18 AM
வாருங்கள் நண்பரே. உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

கௌதமன்
30-03-2012, 04:59 PM
அறிமுகமே அமர்க்களம். அது தொடர வாழ்த்துகள்.

சிற்பியும், சிற்பமும் ஒன்றேயெனும் நிலையில் செதுக்கப்படுவது தெரியாமலே சிற்பம் உருவாகும்.

உங்களைப் போன்றே தமிழில் படித்தவன் என்ற மிகுந்த கர்வத்துடன் தங்களுக்கு நல்வரவைத் தெரிவிப்பது - கௌதமன்

M.Jagadeesan
30-03-2012, 05:14 PM
வருக நண்பரே வருக!

அமரன்
30-03-2012, 09:45 PM
எதிர்பார்க்க வைக்கும் அறிமுகத்துடன் வந்துள்ளீர்கள்..

வருக.. வருக..

நாஞ்சில் த.க.ஜெய்
15-04-2012, 05:43 PM
வாருங்கள் கார்த்திகேயன் வரவு நல வரவாகுக !

govindh
15-04-2012, 09:59 PM
வணக்கம் கார்த்திகேயன்...
வாழ்த்துக்கள்.

கலைவேந்தன்
16-04-2012, 06:10 AM
அருமையான தமிழில் அறிமுகம் உங்கள் புலமையைத் தெரிவிக்கிறது. சுட்டப்பட்ட கவிதையோ உங்கள் கவித்துவ மனம் புரிவிக்கிறது.

வாருங்கள் கார்த்திகேயன்..!