naankarthikeyan
27-03-2012, 11:18 AM
தமிழ் உலகை இணைக்கும் இந்த இணையதள பேருமக்களுக்கு நன்றிகள்!
இத்தளத்தில் "நான்" கார்த்திகேயன்.
"நான்" - இது ஆணவம் இல்லை.
என் அடையாளம்!
பல்லவர்களின் தலைநகர், கோயில்களின் நகரம், பட்டு நகரம், காஞ்சிபுரம் - எனக்கும், யான் அறிந்த என் முதாதையர்க்கும் பிறப்பிடம். சில காலம் சென்னை வாழ்வு; தாவர உயிர்நுட்பவியலின் முனைவர் (பட்டம்); தற்பொழுது ஜெர்மனியில் அறிவியலாளனாய் பயிற்சியும், பணியும் - தமிழகம் செல்லும் காலம் நோக்கி....
நான் தமிழ் வழியில் பயின்றவன் என்பதில், எனக்கு எப்பொழும் ஒரு கர்வம் உண்டு. என் அய்யா (தாத்தா) புலவர் சு. ஏகாம்பரம் அவர்கள், என் மனதில் வாழும் குரு.
எனக்கு துயரும் (உலகத் தமிழர் நிலை, இன்றைய தமிழின் நிலை), இன்பமும் (மாணிக்கவாசகர், பாரதி வரிகள்) தமிழ் தான்.
எனை பற்றி சில வரிகள்...
புவியின் சுழற்சியை மாற்ற முயலும்
புல் நுனி வாழ் பனித் துளி! நான்
செதுக்கப்படுவதை உணர்கிறேன்; சிற்பியும் தெரியவில்லை!
சிற்பமும் புரியவில்லை!!! காலத்தின்
பதிலை நோக்கி....
நண்பர் வட்டம், facebook அளவில் இருக்கும் என் கவிதைகள் இது முதல் இந்த சான்றோர் வலையில்.
நன்றி,
கார்த்திகேயன் சுப்பராயன்.
இத்தளத்தில் "நான்" கார்த்திகேயன்.
"நான்" - இது ஆணவம் இல்லை.
என் அடையாளம்!
பல்லவர்களின் தலைநகர், கோயில்களின் நகரம், பட்டு நகரம், காஞ்சிபுரம் - எனக்கும், யான் அறிந்த என் முதாதையர்க்கும் பிறப்பிடம். சில காலம் சென்னை வாழ்வு; தாவர உயிர்நுட்பவியலின் முனைவர் (பட்டம்); தற்பொழுது ஜெர்மனியில் அறிவியலாளனாய் பயிற்சியும், பணியும் - தமிழகம் செல்லும் காலம் நோக்கி....
நான் தமிழ் வழியில் பயின்றவன் என்பதில், எனக்கு எப்பொழும் ஒரு கர்வம் உண்டு. என் அய்யா (தாத்தா) புலவர் சு. ஏகாம்பரம் அவர்கள், என் மனதில் வாழும் குரு.
எனக்கு துயரும் (உலகத் தமிழர் நிலை, இன்றைய தமிழின் நிலை), இன்பமும் (மாணிக்கவாசகர், பாரதி வரிகள்) தமிழ் தான்.
எனை பற்றி சில வரிகள்...
புவியின் சுழற்சியை மாற்ற முயலும்
புல் நுனி வாழ் பனித் துளி! நான்
செதுக்கப்படுவதை உணர்கிறேன்; சிற்பியும் தெரியவில்லை!
சிற்பமும் புரியவில்லை!!! காலத்தின்
பதிலை நோக்கி....
நண்பர் வட்டம், facebook அளவில் இருக்கும் என் கவிதைகள் இது முதல் இந்த சான்றோர் வலையில்.
நன்றி,
கார்த்திகேயன் சுப்பராயன்.