அமரன்
25-03-2012, 08:55 PM
மன்றத்தின் சொத்துகளே..
மன்றத்தாயின் மடியில்
மகிழ்ந்து குலாவும் மழலைகளே..
பத்தாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்
முத்தான தமிழ் மன்றத்துக்கு
எல்லாரும் கட்டுவோமே வாழ்த்துப் பாமாலை..
கீதம்
26-03-2012, 01:34 AM
தசரதம் ஆடிவரும் தமிழ்ரதம்!
சதரதம் கூடிவரும் சகத்திரம்!
இனசனம் தேடிவரும் இவ்வடம்
இழுத்திட ஓடிவரும் இவ்விடம்!
மன்றவனம் நாடிவரும் கூவினம்
மகிழ்வுடன் பாடிவரும் பாவினம்!
மணம் நிறைத்தப் பூவங்கியிது!
மனம் நிறைக்கும் மாவங்கியுமிது!
கொடுக்கும், கொள்ளும், எண்ணம்
கொண்டதைப் பகிரும் உள்வாங்கி!
அரண்காக்கும் உள்ளம்யாவும்
முரண்போக்கும் முள்வாங்கி!
ஆர்க்கும் மனம் அமைதிபெறும்,
அயர்ந்த உள்ளம் ஆர்த்து எழும்,
அற்புதம் புரியும் அன்னைமன்றத்து
அங்கத்தில் தானும் ஒன்றெனக்கண்டு,
ஆடுதே மனம் ஆனந்தக்கூத்து!
Dr.சுந்தரராஜ் தயாளன்
26-03-2012, 02:55 AM
மிகவும் அருமை...அமரன் அவர்களே...விரைவில் நானும் பத்தாண்டு பற்றியோர் பத்துப் பா எழுதிடுவேன் :)