PDA

View Full Version : மீனவன்...!



vasikaran.g
16-03-2012, 01:30 PM
கடற்கரையில் குடியிருப்பு ,
கடைசிவரை பரிதவிப்பு .!

கண்ணீரின் அணிவகுப்பு ,
கால்வயிற்று கஞ்சியில் களிப்பு .!

அதிகாலையில் பயணிப்பு ,
தண்ணீரின் சலசலப்பு .!

உப்புக்காற்றில் சுவாசிப்பு ,
படகுகளின் அணிவகுப்பு .!

புயல் கடல்சீற்றம் ஏற்பட்டால்
ஊதியம் இல்லா விடுப்பு .!

மாசிபங்குனியில் மீன்களின் கணக்கெடுப்பு ,
சித்திரை வைகாசியில் இவர்களுக்கு
கட்டாய விடுப்பு .!

எந்த ஆயுள் காப்பீட்டுகழகம் அளிக்கும்
இவர்களுக்கு காப்பீடு .!

தினம் தினம் உயிருக்கு போராட்டம் ,
தண்ணீரில்தான் இவர்களின் ஆட்டம்,
பாட்டம் ,கொண்டாட்டம் .!
அங்கீகரிக்கபடாத அரைக்கச்சை கூட்டம்..!!

நாள்கணக்கில் மாதகணக்கில் உழைப்பு ,
இருந்தும் வறுமையின் களிப்பு .!

இன்னல்கள் பல இருந்தும்
இருக்கத்தான் செய்கிறது கொண்டாட்டம் .!

கடல்தான் இவர்களின் வீடு
மற்றும் முதலீடு .!
கடைசிவரை போடும் சோறு .!!

தரைமேல் பிறந்து தண்ணீரில் வாழ்ந்தாலும்
கண்ணீரில் குளித்தாலும் ,
இவர்களும் மனிதர்கள் தான் .!
இறைவனின் செல்லப்பிள்ளைகள் தான் ,

விடுவுகாலம் வருமா ?
சிங்களம் விடுமா ?
சிறுத்தைகள் மீண்டும் உயிர்த்தெழுமா ?
தமிழினம் சினந்தெழுமா ?
தண்ணீரில் கொலை விழுவது தகுமா ?

தமிழன்னையே பொறும்மா .,
தக்கார் வருவார்,தகவிலார் அழிவார் ,
உன் துயர் துடைத்து எறிவார் ...

மீனவம் பேணுவோம் !
ஆணவம் விரட்டுவோம் !!
மானுடம் போற்றுவோம் !!!

வசிகரன்.க

Dr.சுந்தரராஜ் தயாளன்
16-03-2012, 01:45 PM
கடலில் அலையும் மீனவர்களின் அவலநிலையை மாநில மற்றும் மத்திய ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதே இல்லை. வெறும் வாய்ப்பேச்சுத்தான். உண்மை நிலையை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள் வசிகரன். கவிதை அருமை :aktion033::aktion033:

சிவா.ஜி
16-03-2012, 01:49 PM
மீனவரின் உண்மைநிலையை உரத்து உரைக்கும் கவிதைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் வசீகரன்.

அமரன்
16-03-2012, 10:39 PM
பஞ்சபூதங்களின் நேரடி ஆசி பெற்ற இவர்களையும் இவர்கள் படும் பாட்டையும் பாட்டில் சொன்ன கவிக்குப் பாராட்டுகள்.

jayanth
17-03-2012, 02:32 AM
கடற்கரையில் குடியிருப்பு ,
கடைசிவரை பரிதவிப்பு .!

கண்ணீரின் அணிவகுப்பு ,
கால்வயிற்று கஞ்சியில் களிப்பு .!
..........
..........
..........

மீனவம் பேணுவோம் !
ஆணவம் விரட்டுவோம் !!
மானுடம் போற்றுவோம் !!!

வசிகரன்.க

அருமை!!!!!

vasikaran.g
25-03-2012, 11:01 AM
நன்றிங்க தயாளன் ..உங்கள் ஊக்கம் எனக்கு தரும் ஆக்கம் ,வரும் மேலும் பல ஆக்கம்..

vasikaran.g
25-03-2012, 11:03 AM
நன்றிங்க சிவா.ஜி

vasikaran.g
25-03-2012, 11:04 AM
நன்றிங்க அமரன்

vasikaran.g
25-03-2012, 11:05 AM
நன்றிங்க ஜெயந்த் ..

கீதம்
07-04-2012, 02:50 AM
தமிழன்னையே பொறும்மா .,
தக்கார் வருவார்,தகவிலார் அழிவார் ,
உன் துயர் துடைத்து எறிவார் ...

இங்கே சர்க்கார் அலட்சியத்தால் சக உயிர்கள் அழியுதம்மா...

கடல் போற்றும் மீனவம் போற்றும் கவிதைக்குப் பாராட்டுகள் வசீகரன்.

vasikaran.g
08-04-2012, 10:41 AM
நன்றி கீதம் அவர்களே.. பொருக்க முடியாமல் தமிழன்னைக்கு ஆறுதல் கூறுவது போல் என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன் இந்த கவிதையின் மூலமா