பூமகள்
15-03-2012, 03:20 AM
வேர்கள் வேறிடமிருக்க
எங்கோ வந்த விழுதுகள் நாங்கள்..
விண்முட்டும் கட்டிடங்களுக்கிடையில்
கண்முட்டும் களைப்போடு
திண்டாடும் கண்பொறிகள் நாங்கள்..
சொந்த மண்ணின் மணம்
நெஞ்சில் நிறைத்து
வேற்று மண்ணில் வேரூன்ற கலங்கும்
முதல் வேர் நாங்கள்..
அருகிருப்பர் அறிய முடியாத துயர்..
சொந்தம் தொலைவிருக்கையில்
அறிந்தவர்கள் நாங்கள்..
பெருஞ்செய்தி வந்த போதும்..
பேரருவியாய் அழுத போதும்..
விரைந்தோட வழியின்றி
கண்ணிலழுந்தும் தூசியாய்
வலியோடு தான் வாழ்வெங்கும் நாங்கள்..
இத்தனை இருந்தும்
ஏனிந்த துயர் பயணம் என்பீர்கள்..
கல்விக்கடன் தீர்க்க..
கன்னித் தங்கை கரையேற்ற..
பட்ட கடன் அடைக்க..
அடகான வீடு திருப்ப..
பெற்றவர் பெருமனை புகுக்க..
இன்னும் பலவாய்
பலரின் துயர் துடைக்க..
பல்லாயிரம் மைல் கடந்து
அறுந்துவிட்ட பட்டமாய்
தாமாகவே தொலைத்துக் கொள்வோர் நாங்கள்..
பணம் மட்டுமே உயிர்ப்பாய் இங்கே..
உண்மை தான்..
காலணா காசிற்கு
ரேசன் அரிசி உறுதி நம்மூரிலேனும்..
காலணா காசின்றி
கால்படி அரிசிக்கும் வழியின்றி கிடப்போம் நாங்கள்..
இழப்பின் வலி
இன்மையில் நன்குணர்ந்தவர்கள்
நாங்கள்..
சேர்ப்பதில் உச்சம் பணமென்று கொள்வோரே..
நாங்கள் சேர்ப்பதில் ஏழை என்று
உணர்வீரோ உண்மையில்??!!
எங்கோ வந்த விழுதுகள் நாங்கள்..
விண்முட்டும் கட்டிடங்களுக்கிடையில்
கண்முட்டும் களைப்போடு
திண்டாடும் கண்பொறிகள் நாங்கள்..
சொந்த மண்ணின் மணம்
நெஞ்சில் நிறைத்து
வேற்று மண்ணில் வேரூன்ற கலங்கும்
முதல் வேர் நாங்கள்..
அருகிருப்பர் அறிய முடியாத துயர்..
சொந்தம் தொலைவிருக்கையில்
அறிந்தவர்கள் நாங்கள்..
பெருஞ்செய்தி வந்த போதும்..
பேரருவியாய் அழுத போதும்..
விரைந்தோட வழியின்றி
கண்ணிலழுந்தும் தூசியாய்
வலியோடு தான் வாழ்வெங்கும் நாங்கள்..
இத்தனை இருந்தும்
ஏனிந்த துயர் பயணம் என்பீர்கள்..
கல்விக்கடன் தீர்க்க..
கன்னித் தங்கை கரையேற்ற..
பட்ட கடன் அடைக்க..
அடகான வீடு திருப்ப..
பெற்றவர் பெருமனை புகுக்க..
இன்னும் பலவாய்
பலரின் துயர் துடைக்க..
பல்லாயிரம் மைல் கடந்து
அறுந்துவிட்ட பட்டமாய்
தாமாகவே தொலைத்துக் கொள்வோர் நாங்கள்..
பணம் மட்டுமே உயிர்ப்பாய் இங்கே..
உண்மை தான்..
காலணா காசிற்கு
ரேசன் அரிசி உறுதி நம்மூரிலேனும்..
காலணா காசின்றி
கால்படி அரிசிக்கும் வழியின்றி கிடப்போம் நாங்கள்..
இழப்பின் வலி
இன்மையில் நன்குணர்ந்தவர்கள்
நாங்கள்..
சேர்ப்பதில் உச்சம் பணமென்று கொள்வோரே..
நாங்கள் சேர்ப்பதில் ஏழை என்று
உணர்வீரோ உண்மையில்??!!