PDA

View Full Version : தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்



M.Rishan Shareef
10-03-2012, 11:37 AM
தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன் (http://mrishanshareef.blogspot.com/2011/12/blog-post.html)

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

- எம்.ரிஷான் ஷெரீப்

சிவா.ஜி
10-03-2012, 05:13 PM
நல்லவேளை...இந்தக்கவிதை....இன்ன தளத்தில்....இன்ன பரிசைப்பெற்றதென சொல்லி இங்கே பதிக்காமல், முதல் பதிப்பாய் பதிந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி.

எப்போதும்போல் புரியாத வரிகளுடன்....கனத்தக் கவிதையான தோற்றத்துடன்......வந்த கவிதைக்கு வாழ்த்துக்கள்(வேறென்ன சொல்ல)

sarcharan
12-03-2012, 11:45 AM
ரிஷான்,
கவிதை அருமை.

சிவாண்ணா உங்களை இனிமேல் கவிதை எழுத்த கூடாது என்று சொல்லுகிறார் பாருங்க... :confused:;):p