PDA

View Full Version : வசந்தமாய் நீ....



sivani
04-03-2012, 02:43 PM
வானவில்லின் வண்ணமாய் உன் நினைவுகள் ...
வந்து மறைந்து போகின்றதே!
வசந்தமாய் என் வாசலில் வந்தாய்..
வளர்பிறையாய் என்
வாழ்கையில் ஒளிர்ந்தாய் !
வழி நெடுக என் கைகோர்த்து நடந்தாய்..
வளம் பெறவே
புது வார்த்தைகள் சொன்னாய் !
வாழ்ந்து பார்ப்போம் எனும்
விதைகளை விதைத்தாய் !!

சிவா.ஜி
04-03-2012, 07:25 PM
வாழ்ந்து பார்க்க விதைகள் விதைத்தவனை நினைவு கூறும் நல் வரிகள்.....ஆழமான வரிகள். அழகான வரிகள். வாழ்த்துக்கள் ஷிவானி.

ஆதி
05-03-2012, 05:03 AM
ஒரு நம்பிக்கை விதைக்கப்படும் போது, வாழ்க்கை வளர்பிறையாகிறது, வசந்த பிறக்கிறது, வாழ்ந்து பார்ப்போம் எனும் வாஞ்சையும், மனதிடமும் உண்டாகிறது..

வாழ்த்துக்கள் sivani ...

அமரன்
05-03-2012, 05:18 AM
அவ்வப்போது கிடைக்கும் சின்னன் சின்னச் சின்ன விசயங்கள், பாரிய உற்சாகத்தாக்கத்தைத் தந்து, தெம்பாக அடி எடுத்து வைக்க உதவும் எனும் தத்துவக் கருக்கொண்ட காதல் கவி..

aren
05-03-2012, 06:26 AM
நம்பிக்கை விதைகள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.

அழகான கவிதை. இன்னும் நிறைய கொடுங்கள்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 10:20 AM
அழகிய கவிதை...என் பாராட்டுக்கள் :)

sivani
07-03-2012, 12:16 PM
வாழ்கையில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் அதனை மறந்து முன்னேறிட எனக்கு வழியாய் விளங்குபவை என் உயிர் தமிழும் நம் தமிழ்மன்றமும் தான்!!! தொடர்வேன் பயணத்தை தோழர்களே! எனக்கு உற்சாகம் மூட்டும் உங்களுக்கு என் நன்றி மலர்கள் !

*ஒரு உதவி... இந்த பக்கத்தில் சிவானி என்று வேற்று மொழியில் இருக்கும் என் பெயரை எவ்வாறு தமிழ் எழுத்துகளுக்கு மாற்றுவது?


--- தமிழோடு வாழ்வோம் !
தமிழோடு உயர்வோம் ! ---