View Full Version : வசந்தமாய் நீ....
sivani
04-03-2012, 02:43 PM
வானவில்லின் வண்ணமாய் உன் நினைவுகள் ...
வந்து மறைந்து போகின்றதே!
வசந்தமாய் என் வாசலில் வந்தாய்..
வளர்பிறையாய் என்
வாழ்கையில் ஒளிர்ந்தாய் !
வழி நெடுக என் கைகோர்த்து நடந்தாய்..
வளம் பெறவே
புது வார்த்தைகள் சொன்னாய் !
வாழ்ந்து பார்ப்போம் எனும்
விதைகளை விதைத்தாய் !!
சிவா.ஜி
04-03-2012, 07:25 PM
வாழ்ந்து பார்க்க விதைகள் விதைத்தவனை நினைவு கூறும் நல் வரிகள்.....ஆழமான வரிகள். அழகான வரிகள். வாழ்த்துக்கள் ஷிவானி.
ஒரு நம்பிக்கை விதைக்கப்படும் போது, வாழ்க்கை வளர்பிறையாகிறது, வசந்த பிறக்கிறது, வாழ்ந்து பார்ப்போம் எனும் வாஞ்சையும், மனதிடமும் உண்டாகிறது..
வாழ்த்துக்கள் sivani ...
அமரன்
05-03-2012, 05:18 AM
அவ்வப்போது கிடைக்கும் சின்னன் சின்னச் சின்ன விசயங்கள், பாரிய உற்சாகத்தாக்கத்தைத் தந்து, தெம்பாக அடி எடுத்து வைக்க உதவும் எனும் தத்துவக் கருக்கொண்ட காதல் கவி..
நம்பிக்கை விதைகள் வாழ்க்கைக்கு அஸ்திவாரம்.
அழகான கவிதை. இன்னும் நிறைய கொடுங்கள்.
Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 10:20 AM
அழகிய கவிதை...என் பாராட்டுக்கள் :)
sivani
07-03-2012, 12:16 PM
வாழ்கையில் எவ்வளவு வலிகள் இருந்தாலும் அதனை மறந்து முன்னேறிட எனக்கு வழியாய் விளங்குபவை என் உயிர் தமிழும் நம் தமிழ்மன்றமும் தான்!!! தொடர்வேன் பயணத்தை தோழர்களே! எனக்கு உற்சாகம் மூட்டும் உங்களுக்கு என் நன்றி மலர்கள் !
*ஒரு உதவி... இந்த பக்கத்தில் சிவானி என்று வேற்று மொழியில் இருக்கும் என் பெயரை எவ்வாறு தமிழ் எழுத்துகளுக்கு மாற்றுவது?
--- தமிழோடு வாழ்வோம் !
தமிழோடு உயர்வோம் ! ---