Nanban
23-12-2003, 03:01 AM
கடற்கரை...........
**************
எறியப்பட்ட கல்லாய்
திடுக்கிட்டு பறக்கும் பறவை.
கறி வைக்க
உயிருடன் துடிக்கும் மீன்.
தொலைத்த நலங்களை
தேடி நடக்கும் மனிதன்.
அன்றைய உணவுக்காக
சுண்டல் விற்கும் பையன்.
கைப்பிடி நழுவி காற்றில் கலந்த
பலூனிற்கு அழும் குழந்தை.
திறந்த வெளியில் துணிச்சலுடன்
ரகசியம் பேசும் ஒண்டுகுடித்தன தம்பதிகள்.
படபடப்புடன் கால் நனைத்துக் காத்திருக்கும்
காதல் வசப்பட்ட ஜீவன்கள்.
கறுப்பு வெளுப்புக் கண்களில்
வண்ணங்கள் வாங்க வந்திருக்கும் விடலைகள்.
எல்லாம் போய்விட்டது -
ஆட்சியாளரின் அழகுணர்ச்சியில்.
என் கவிதைகளில் எழுத
நான் என்ன காட்சியைக்
கண்டுவிடப் போகிறேன் -
செத்துக் கிடக்கும் கடற்கரையில்?
**************
எறியப்பட்ட கல்லாய்
திடுக்கிட்டு பறக்கும் பறவை.
கறி வைக்க
உயிருடன் துடிக்கும் மீன்.
தொலைத்த நலங்களை
தேடி நடக்கும் மனிதன்.
அன்றைய உணவுக்காக
சுண்டல் விற்கும் பையன்.
கைப்பிடி நழுவி காற்றில் கலந்த
பலூனிற்கு அழும் குழந்தை.
திறந்த வெளியில் துணிச்சலுடன்
ரகசியம் பேசும் ஒண்டுகுடித்தன தம்பதிகள்.
படபடப்புடன் கால் நனைத்துக் காத்திருக்கும்
காதல் வசப்பட்ட ஜீவன்கள்.
கறுப்பு வெளுப்புக் கண்களில்
வண்ணங்கள் வாங்க வந்திருக்கும் விடலைகள்.
எல்லாம் போய்விட்டது -
ஆட்சியாளரின் அழகுணர்ச்சியில்.
என் கவிதைகளில் எழுத
நான் என்ன காட்சியைக்
கண்டுவிடப் போகிறேன் -
செத்துக் கிடக்கும் கடற்கரையில்?