M.Jagadeesan
19-02-2012, 02:31 PM
என்காதலை நீ ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்
உன்காதலுக்கு உலைவைப்பேன் என்று எண்ணாதே!
முன்பே நீ நிராகரித்து இருந்தால் எனக்கு
உன்பேரில் இவ்வளவு கோபம் இருக்காது.
நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.
உன்னிடம் நான் கண்ட நல்ல குணங்கள்
பெண்ணிடம் பொதுவாக இல்லாத குணங்கள்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நீ எண்ணவில்லை
கறுத்தவன் சிவந்தவன் என்று நிறத்தைப் பார்க்கவில்லை.
இந்து முஸ்லிம் என்று மதத்தைப் பார்க்கவில்லை
தமிழன் தெலுங்கன் என்று இனத்தைப் பார்க்கவில்லை
நீ கண்டதெல்லாம் அன்பு ஒன்றே!
இச்சைக்கு இனியவளாய் இருந்த உன்னை நான்
கொச்சைப் படுத்திவிட்டேன் கோடிமுறை மன்னிப்பாய்.
உன்னை மணக்க நான் அவசரப்பட்ட போது
பெற்றோர் சம்மதத்தைப் பெறும் வரையில் காத்திரு
கற்றவன் புரிந்து கொள்வாய் என்று நீ சொன்னபோது
ஆணுக்கே உள்ள அவசரப் புத்தியால்
" ஓடிப் போய்விடலாமா? " என்று நான் சொன்ன வார்த்தையால்
ஆடிப் போய்விட்டாய்! அன்றுமுதல் எனை வெறுத்தாய்!
நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.
உன்காதலுக்கு உலைவைப்பேன் என்று எண்ணாதே!
முன்பே நீ நிராகரித்து இருந்தால் எனக்கு
உன்பேரில் இவ்வளவு கோபம் இருக்காது.
நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.
உன்னிடம் நான் கண்ட நல்ல குணங்கள்
பெண்ணிடம் பொதுவாக இல்லாத குணங்கள்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று நீ எண்ணவில்லை
கறுத்தவன் சிவந்தவன் என்று நிறத்தைப் பார்க்கவில்லை.
இந்து முஸ்லிம் என்று மதத்தைப் பார்க்கவில்லை
தமிழன் தெலுங்கன் என்று இனத்தைப் பார்க்கவில்லை
நீ கண்டதெல்லாம் அன்பு ஒன்றே!
இச்சைக்கு இனியவளாய் இருந்த உன்னை நான்
கொச்சைப் படுத்திவிட்டேன் கோடிமுறை மன்னிப்பாய்.
உன்னை மணக்க நான் அவசரப்பட்ட போது
பெற்றோர் சம்மதத்தைப் பெறும் வரையில் காத்திரு
கற்றவன் புரிந்து கொள்வாய் என்று நீ சொன்னபோது
ஆணுக்கே உள்ள அவசரப் புத்தியால்
" ஓடிப் போய்விடலாமா? " என்று நான் சொன்ன வார்த்தையால்
ஆடிப் போய்விட்டாய்! அன்றுமுதல் எனை வெறுத்தாய்!
நான் சொன்ன அந்த ஒருவார்த்தை
ஏன் சொன்னோம் என்று எண்ணுகிறேன்.