susibala.k
14-02-2012, 05:03 PM
மனம் ஒரு மந்திரக்குளம்!
என்றுமே நிறைந்திடாத எந்திரக்குளம் !
அழுகையோடு ஆரம்பித்த அதன் பயணம்
அந்தம் வரை நிறைந்திடாத நெடுந்தூரம் !
பிஞ்சு வயதில் உணர்ந்திட்ட தாய்ப்பாசம் !!
அஞ்சு வயதில் அறிந்திட்ட அன்பு வட்டம் !!
பருவ வயதில் பார்த்திட்ட பாசக்கூட்டம் !!
பாசக்கூட்டம் பழக்கிவிட்ட கனவுலகம் !!
கனவுலகம் காட்டிய கலங்கும் அனுபவம் !!
இல்லறத்தில் இனிதான அரங்கேற்றம் !
எதார்த்த வாழ்க்கையின் இன்பம் துன்பம் !
மழலை கண்டே களிப்புற்ற மனமகிழ்ச்சி !
குழந்தை வளர்ப்பில் அடைந்திட்ட மதிமயக்கம் !
சமுதாயச் சீர்கேட்டின் சங்கடங்கள் !
சங்கடங்களைத் தாண்டி வரும் சந்தோஷங்கள் !
பண்பாட்டைப் பாடிவரும் திருமணங்கள் !
தொன்றுதொட்டே வளர்த்து விட்ட வாரிசுகள் !
வாழவைத்தே மனம் குளிரும் வாழ்க்கைநெறிகள் !
வாழ்ந்து முடித்த அனுபவத்தின் நரைமுடிகள் !
நரைமுடிக்குச் சாயமிடும் நகாசுத் தருணங்கள் !
இத்தணையும் உள்ளடக்கியும் நிறைந்ததா மனமென்றால்
நித்தம் ஒரு வெற்றிடத்தை நெறியுடனே கொண்டேதான்
ஏதாவது கிடைக்குமென்றே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்
மனம் ஒரு மந்திரக் குளம் !!!!!! :)
என்றுமே நிறைந்திடாத எந்திரக்குளம் !
அழுகையோடு ஆரம்பித்த அதன் பயணம்
அந்தம் வரை நிறைந்திடாத நெடுந்தூரம் !
பிஞ்சு வயதில் உணர்ந்திட்ட தாய்ப்பாசம் !!
அஞ்சு வயதில் அறிந்திட்ட அன்பு வட்டம் !!
பருவ வயதில் பார்த்திட்ட பாசக்கூட்டம் !!
பாசக்கூட்டம் பழக்கிவிட்ட கனவுலகம் !!
கனவுலகம் காட்டிய கலங்கும் அனுபவம் !!
இல்லறத்தில் இனிதான அரங்கேற்றம் !
எதார்த்த வாழ்க்கையின் இன்பம் துன்பம் !
மழலை கண்டே களிப்புற்ற மனமகிழ்ச்சி !
குழந்தை வளர்ப்பில் அடைந்திட்ட மதிமயக்கம் !
சமுதாயச் சீர்கேட்டின் சங்கடங்கள் !
சங்கடங்களைத் தாண்டி வரும் சந்தோஷங்கள் !
பண்பாட்டைப் பாடிவரும் திருமணங்கள் !
தொன்றுதொட்டே வளர்த்து விட்ட வாரிசுகள் !
வாழவைத்தே மனம் குளிரும் வாழ்க்கைநெறிகள் !
வாழ்ந்து முடித்த அனுபவத்தின் நரைமுடிகள் !
நரைமுடிக்குச் சாயமிடும் நகாசுத் தருணங்கள் !
இத்தணையும் உள்ளடக்கியும் நிறைந்ததா மனமென்றால்
நித்தம் ஒரு வெற்றிடத்தை நெறியுடனே கொண்டேதான்
ஏதாவது கிடைக்குமென்றே எதிர்பார்த்து ஏங்கி நிற்கும்
மனம் ஒரு மந்திரக் குளம் !!!!!! :)