PDA

View Full Version : வானில் ஒ​ரே இரவில் காணப்பட இரு​க்கும் ஐந்து கோள்கள்



Hega
13-02-2012, 09:14 PM
வானில் ஒ​ரே இரவில் காணப்பட இரு​க்கும் ஐந்து கோள்கள்


வானிலுள்ள கிரகங்களை சூரிய வெளிச்சத்தின் காரணமாகவும், அவை சுற்றிவரும் ஒழுக்கில் ஒன்றிலிருந்த ஒன்று மறைவதன் காரணமாகவும் அவற்றை ஒரே நேரத்தில் அவதானிக்க முடிவதில்லை.
இருந்தும் அபூர்வமாக இந்த மாதத்தில் ஐந்து கிரகங்களை ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் அரவிந் பரன்ஜ்பே தெரிவித்துள்ளார்.

புதன், வௌ்ளி, வியாழன், சனி, செவ்வாய் ஆகிய கோள்களே இவ்வாறு ஒரே இரவில் தோற்றமளிக்கவுள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்நிகழ்வானது அனேகமாக பெப்ரவரி 22 தொடக்கம் 24 வரையான காலப்பகுதியில் மாலை ஏழு மணியிலிருந்து மறுநாள் காலை ஒரு மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவற்றுள் வௌ்ளி கிரகத்தை வெற்றுக்கண்ணின் ஊடாக நாள் தோறும் இரவு ஒன்பது மணியிலிருந்து பதினொரு மணிவரையும், சனி செவ்வாய் ஆகிய கோள்களை பார்வை உபகரணங்களை பயன்படுத்தாது சூரியன் உதித்து மறையும் காலப்பகுதியில் பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழ் வின்

Hega
13-02-2012, 09:18 PM
http://manithan.com/photos/thumbs/2012/02/five_planets_night_001.jpg

இராஜேஸ்வரன்
13-02-2012, 10:45 PM
நல்ல தகவலை கொடுத்ததற்கு நன்றி.

Hega
14-02-2012, 08:51 PM
வானத்தில் கோள்களின் அணிவகுப்பை படம் பிடித்து பகிருங்கள் இராஜேஸ்வரன் சார்.

அமரன்
14-02-2012, 09:03 PM
வானத்தில் கோள்களின் அணிவகுப்பை படம் பிடித்து பகிருங்கள் இராஜேஸ்வரன் சார்.

ம்ம்ம்ம்.. காத்திருக்கிறோம்.

சிவா.ஜி
14-02-2012, 09:05 PM
எங்கெல்லாம் தெரியும்மா? நான் இருக்கும் பகுதியில் தெரியுமா(பஹ்ரைன்ல)

Hega
14-02-2012, 09:21 PM
இந்தியாவின் நேரு வானிலை மையத்தின் இயக்குனர் அரவிந் பரன்ஜ்பே தன தெரிவித்திருக்கிறார் அண்ணா.