அக்னி
25-01-2012, 12:17 PM
காயங்களை
மனதுக்குள் புதைத்தது நான்..,
காயம்செய்து
மனதையே புதைத்தது நானல்ல...
என் மனம் என்ன விதையா,
புதைத்தால் துளிர்க்கவும்,
துளிர்த்துச் சிரிக்கவும்?
மனம் புன்சிரிக்கவில்லை,
மனப்புண் சிரிக்கின்றது.
மா ரணம் மரணத்தில்
முடியாது..,
மரணத்தோடுதான்
முடியும்...
காரணம்,
புதைக்கப்பட்டது
என் மனம்தானே அன்றி,
நானல்லவே...
மனதுக்குள் புதைத்தது நான்..,
காயம்செய்து
மனதையே புதைத்தது நானல்ல...
என் மனம் என்ன விதையா,
புதைத்தால் துளிர்க்கவும்,
துளிர்த்துச் சிரிக்கவும்?
மனம் புன்சிரிக்கவில்லை,
மனப்புண் சிரிக்கின்றது.
மா ரணம் மரணத்தில்
முடியாது..,
மரணத்தோடுதான்
முடியும்...
காரணம்,
புதைக்கப்பட்டது
என் மனம்தானே அன்றி,
நானல்லவே...