PDA

View Full Version : நூல்கண்டு



rema
19-01-2012, 02:56 PM
நூல்கண்டு

பூ கட்ட பொட்டல நூலை
சேர்த்து வையென
சிறு வயதில்
பெரியவர் சொல்ல...
அதை சிக்கலெடுத்து
சுற்ற சலிப்பே உறும்..

என்ன பெறும் இந்நூல் !!
பாங்காய் இல்லையென
திட்டை தருதேயென
கோபமும் கொண்டதுண்டு...

பூ கட்ட உட்கார்ந்து,
சேர்த்து வைத்த
நூல் கேட்பர் !!
எடுத்துக் கொடுத்தால்
ஆனந்தமாய் கட்டுவர்..

பிறிதொரு பொழுதில்
பூ கட்ட நூல் கேட்கையில்
வீட்டு உபயோகத்துக்கென
வாங்கிய பெரிய நூல்கண்டினை

நான் பெருமையாய் தந்து
அவர்களின் முகம் தேட
ஆழ்ப் பார்வை பார்த்து..
அமைதியாக பெறப்பட்டது..
சிறு மன சிக்கலில் நான்!!!

ஜான்
19-02-2012, 01:14 PM
எளிமையும் இனிமையும்

இரண்டறக் கலந்தது
நூலும் பூவுமாய்
நன்று

vasikaran.g
25-02-2012, 02:54 AM
நன்று நன்று

rema
05-03-2012, 07:29 AM
எளிமையும் இனிமையும்

இரண்டறக் கலந்தது
நூலும் பூவுமாய்
நன்று

நன்றி spja !

rema
05-03-2012, 07:30 AM
நன்று நன்று

நன்றி வசீகரன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
06-03-2012, 10:10 AM
நூல்கண்டுக்கு இவ்வளவு மகிமையா...நன்று..நன்று..:)

rema
09-03-2012, 02:10 AM
நூல்கண்டுக்கு இவ்வளவு மகிமையா...நன்று..நன்று..:)

நன்றி !