rema
19-01-2012, 02:56 PM
நூல்கண்டு
பூ கட்ட பொட்டல நூலை
சேர்த்து வையென
சிறு வயதில்
பெரியவர் சொல்ல...
அதை சிக்கலெடுத்து
சுற்ற சலிப்பே உறும்..
என்ன பெறும் இந்நூல் !!
பாங்காய் இல்லையென
திட்டை தருதேயென
கோபமும் கொண்டதுண்டு...
பூ கட்ட உட்கார்ந்து,
சேர்த்து வைத்த
நூல் கேட்பர் !!
எடுத்துக் கொடுத்தால்
ஆனந்தமாய் கட்டுவர்..
பிறிதொரு பொழுதில்
பூ கட்ட நூல் கேட்கையில்
வீட்டு உபயோகத்துக்கென
வாங்கிய பெரிய நூல்கண்டினை
நான் பெருமையாய் தந்து
அவர்களின் முகம் தேட
ஆழ்ப் பார்வை பார்த்து..
அமைதியாக பெறப்பட்டது..
சிறு மன சிக்கலில் நான்!!!
பூ கட்ட பொட்டல நூலை
சேர்த்து வையென
சிறு வயதில்
பெரியவர் சொல்ல...
அதை சிக்கலெடுத்து
சுற்ற சலிப்பே உறும்..
என்ன பெறும் இந்நூல் !!
பாங்காய் இல்லையென
திட்டை தருதேயென
கோபமும் கொண்டதுண்டு...
பூ கட்ட உட்கார்ந்து,
சேர்த்து வைத்த
நூல் கேட்பர் !!
எடுத்துக் கொடுத்தால்
ஆனந்தமாய் கட்டுவர்..
பிறிதொரு பொழுதில்
பூ கட்ட நூல் கேட்கையில்
வீட்டு உபயோகத்துக்கென
வாங்கிய பெரிய நூல்கண்டினை
நான் பெருமையாய் தந்து
அவர்களின் முகம் தேட
ஆழ்ப் பார்வை பார்த்து..
அமைதியாக பெறப்பட்டது..
சிறு மன சிக்கலில் நான்!!!