M.Jagadeesan
19-01-2012, 02:44 AM
நிற்பவை எல்லாம் நிற்பவை அல்ல
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.
வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.
உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.
வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.
சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.
கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.
வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.
உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.
வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.
சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.
கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.