PDA

View Full Version : நிற்பவை எல்லாம் நிற்பவையல்ல



M.Jagadeesan
19-01-2012, 02:44 AM
நிற்பவை எல்லாம் நிற்பவை அல்ல
நீடித்த புகழே நிற்பவை ஆகும்.
கற்பவை எல்லாம் கல்வியல்ல -சொந்தக்
காலில் நிற்கச் செய்வதே கல்வியாகும்.

வாழ்வது எல்லாம் வாழ்க்கையல்ல -பகுத்துண்டு
வாழும் வாழ்க்கையே வாழ்க்கையாகும்.
வீழ்வது எல்லாம் வீழ்ச்சியல்ல என்றும்
வீழ்ந்து கிடப்பதே வீழ்ச்சியாகும்.

உண்மை எல்லாம் உண்மையல்ல மற்றவர்க்கு
நன்மை செய்வதே உண்மையாகும்.
திண்மை எல்லாம் திண்மையல்ல தோல்வியை
ஏற்றுக் கொள்வதே திண்மையாகும்.

வெற்றி எல்லாம் வெற்றியல்ல நல்வழியில்
பெற்றவை மட்டுமே வெற்றியாகும்.
தோல்வி எல்லாம் தோல்வியல்ல அதைத்
தொடர விடுவதே தோல்வியாகும்.

சுற்றம் எல்லாம் சுற்றமல்ல துன்பத்தில்
பங்கு கொள்வதே சுற்ற மாகும்.
குற்றம் எல்லாம் குற்றமல்ல மீண்டும்
திரும்பச் செய்வதே குற்றமாகும்.

கற்றவர் எல்லாம் கற்றோர் அல்லர்-கற்றவழி
நிற்பவர் தாமே கற்றோர் ஆவார்.
பெற்றவை எல்லாம் பிள்ளைகளல்ல-பெற்றோர்க்கு
பெருமை சேர்ப்பவரே பிள்ளைகளாகும்.

கீதம்
19-01-2012, 10:05 AM
கவிதையில் சொல்லப்பட்டிருக்கும் அரிய கருத்தில் மனம் பறிகொடுத்தேன். மிகவும் ரசித்தவை இந்த வரிகள் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாமல் கவிதை முழுவதுமே அழகும் அர்த்தமும் நிறைந்ததாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுகள் ஐயா.

M.Jagadeesan
19-01-2012, 10:09 AM
கீதம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

matheen
21-01-2012, 02:34 PM
வாசிக்கும் போது வாய் இனித்தது
வாசித்த பின் மனமும் இனிக்கிற*து

M.Jagadeesan
21-01-2012, 02:57 PM
பாராட்டுக்கு நன்றி மைதீன்.

ஜானகி
22-01-2012, 01:12 AM
வார்த்தைகள் எல்லாமே கவிதைகள் தானாம்

பாதை காட்டும் வழிகாட்டிகளாக உருவெடுக்கும்போது....

M.Jagadeesan
22-01-2012, 01:30 AM
ஜானகி அவர்களின் பாராட்டுக்கு நன்றி.

vasikaran.g
30-01-2012, 03:10 AM
அருமை

M.Jagadeesan
30-01-2012, 03:24 AM
வசீகரனின் பாராட்டுக்கு நன்றி.

susibala.k
30-01-2012, 04:34 AM
அல்ல அல்ல என்றே சொல்லி “ஆமாம்” எங்கே எனத்தேடத் தூண்டும் !!!
ஆகும் ஆகும் என்றே சொல்லி வாழ்வின் ஆதாரத்தைத் தேடத்தூண்டும்!!!
இவை என்ன வரிகளா இல்லை வாழ்வின் நெறிகளா??? !!!!!!!!!!!!

வணக்கங்களுடன் வாத்துக்கள் .

M.Jagadeesan
30-01-2012, 08:25 AM
வரிகளல்ல ; வாழ்க்கையின் நெறிகள்!
நீங்கள் எனக்குத் தெரிவித்தது வாழ்த்துக்களா? அல்லது வாத்துக்களா?

susibala.k
30-01-2012, 12:03 PM
வாழ்த்து சொல்லவே விழைந்தேன் , மதி மயக்கத்தால் வாழ்த்து வாத்து ஆகி விட்டது , வாழ்வின் நெறிகளுக்கும் வாழ்த்த வாய்ப்பளித்த வரிகளுக்கும் நன்றி .

பென்ஸ்
06-02-2012, 05:40 PM
நல்ல வரிகள் ஜகதீசன்... என் மனதில் நல்ல விதையை விதைத்த வரிகள்...
நன்றி...

M.Jagadeesan
07-02-2012, 01:23 AM
பென்ஸ் அவர்களின் வாழ்த்துக்கு நன்றி.

Dr.சுந்தரராஜ் தயாளன்
01-04-2012, 04:21 PM
மிகவும் அழகான கவிதை....பாராட்டுகிறேன் :)