PremM
14-01-2012, 07:41 AM
திறக்காத கதவுகளின் பின்னால்,
கற்பனைகளும்,
கதைகளும் வாசல் முட்டி
நிற்கின்றன...
காற்றோ ,
வெளிச்சமோ
தீண்டாத சுவர்களில்,
சுவாரஸ்யமான பலப் பொய்கள்
படிந்து கிடக்கின்றன..
காலுடைந்தக் கிழவன்
கயிற்றுக் கட்டிலில் காத்திருக்கிறான்..- இது பாட்டி
இரு தலைகளோடு,
இரும்புக் கரங்களும்,
அவனது உருவமென
என்னுள் திணித்தாள்
சோற்றுப் பருக்கையோடு.. இது அம்மா
இமைகள் இல்லாத கண்களுடனும்,
நகங்கள் இல்லாத விரல்களுடனும்
இரவில் கண்டதாய்
அள்ளித் தெளித்தான் முத்து..
அதனை அவரசமாய் ஆமோதித்தான்
வரதன்..
உறைந்த ரத்தத்தோடு,
கால்கள் இரண்டு,
மேஜை மேல் கிடந்ததாய் கடைசிச் செய்தி..
ஆண்டுகள் கடந்தும்,
திறக்கப்படாத அந்த கதவுகளைக் கண்டதும்
"ஏன் அப்பா அந்தக் கதவு மூடியே இருக்கு?" - இது மகன்
என்னுள் தயாராகிக் கொண்டிருந்தது
அடுத்த பொய்..
கற்பனைகளும்,
கதைகளும் வாசல் முட்டி
நிற்கின்றன...
காற்றோ ,
வெளிச்சமோ
தீண்டாத சுவர்களில்,
சுவாரஸ்யமான பலப் பொய்கள்
படிந்து கிடக்கின்றன..
காலுடைந்தக் கிழவன்
கயிற்றுக் கட்டிலில் காத்திருக்கிறான்..- இது பாட்டி
இரு தலைகளோடு,
இரும்புக் கரங்களும்,
அவனது உருவமென
என்னுள் திணித்தாள்
சோற்றுப் பருக்கையோடு.. இது அம்மா
இமைகள் இல்லாத கண்களுடனும்,
நகங்கள் இல்லாத விரல்களுடனும்
இரவில் கண்டதாய்
அள்ளித் தெளித்தான் முத்து..
அதனை அவரசமாய் ஆமோதித்தான்
வரதன்..
உறைந்த ரத்தத்தோடு,
கால்கள் இரண்டு,
மேஜை மேல் கிடந்ததாய் கடைசிச் செய்தி..
ஆண்டுகள் கடந்தும்,
திறக்கப்படாத அந்த கதவுகளைக் கண்டதும்
"ஏன் அப்பா அந்தக் கதவு மூடியே இருக்கு?" - இது மகன்
என்னுள் தயாராகிக் கொண்டிருந்தது
அடுத்த பொய்..